கட்சியில் இருந்து எவரையும் நீக்கபோவதில்லை : சுமோவுக்கு பதிலடி கொடுத்த எம்பி

ITAK Current Political Scenario Gnanamuththu Srineshan
By Shalini Balachandran Dec 15, 2024 12:47 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

கடந்த தேர்தலில் கட்சியில் இருந்து விலகி செயற்பட்டவர்களை கட்சியில் இருந்து நீக்குவதாக ஏகமனதாக தீர்மானிக்கவில்லை அத்தோடு நானே தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் என தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் (Gnanamuththu Srinesan) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்றைய கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் பல விடயங்கள் இருந்தன ஆனாலும் ஒரு விடயம் ஆராயப்பட்டது.

அர்ச்சுனாவின் செயற்பாடு குறித்து சிறீதரன் எம்.பி அளித்த பதில்!

அர்ச்சுனாவின் செயற்பாடு குறித்து சிறீதரன் எம்.பி அளித்த பதில்!

பதவி விலகல் கடிதம்

தமிழரசுக் கட்சி தலைவரின் பதவி விலகல் கடிதம் தொடர்பாக வாதப்பிரதி வாதங்கள் இடம்பெற்றன.

அந்த கடிதத்தை மாவை சேனாதிராஜா அனுப்பியதன் பின்னர் பதவி விலகல் கடிதத்தில் இருந்து வாபஸ் பெறுவதாக சொல்லியிருந்தார். அத்தோடு மீண்டும் தலைவராக இருப்பதற்கான சம்மதத்தை தெரிவித்து இருந்தார்.

அது தொடர்பாக எமது கட்சி உறுப்பினர்கள் மத்தியில் இரண்டு கருத்துக்கள் இருந்தன. அதன் அடிப்படையில் அவர் பதவி வகிக்க வேண்டும் என்ற ஒரு கருத்தும், கடிதம் கொடுத்ததன் பிரகாரம் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற ஒரு கருத்தும் இருந்தது.

கட்சியில் இருந்து எவரையும் நீக்கபோவதில்லை : சுமோவுக்கு பதிலடி கொடுத்த எம்பி | Srinesan Responds To Sumanthiran Comments

ஒரு ஜனநாயக கட்சி என்ற அடிப்படையில் அந்த வாதப் பிரதி வாதங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றது. தீர்க்கமான முடிவு எடுக்க முடியாத நிலையில் இரு தரப்பு கருத்துக்களும் இருந்தன. ஜனநாயக ரீதியாக இதனை பார்க்க வேண்டியிருந்தது.

இதனால் பதவி விலகலை உடனடியாக ஏற்றுக் கொள்ளவில்லை. எதிர்வரும் 28 ஆம் திகதி வரை ஒத்தி வைத்து மீண்டும் கூட்டம் ஒன்றை கூட்டி தலைவர் யார் என்று முடிவெடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது. தேர்தலில ஏற்பட்ட பின்னடைவு குறித்தும் ஆராயப்பட்டது.

குறிப்பாக வடக்கு மாகாணத்தில் ஏற்பட்ட பின்னடைவு பற்றி பேசப்பட்டது. இதற்கு பதவி விலகல் ஒரு காரணம் சொல்லப்பட்டாலும் இன்னும் பல காரணங்கள இருந்தன.

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு : காரணத்தை அம்பலப்படுத்திய அமைச்சர்

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு : காரணத்தை அம்பலப்படுத்திய அமைச்சர்

நடு நிலமையான ஆய்வு

அதனை சுயாதீனமான, நடு நிலமையான ஆய்வு குழு மூலம் ஆராய்ந்து அறிக்கைப்படுத்திய பின்னர் தான் கருத்து கூற முடியும் ஒவ்வொருவரது கருத்துகளும் சுயம் சார்ந்து இருக்கின்றன.

ஆய்வுக் குழு மூலம் அதனை மேறகொண்டால் அது பயன் உள்ளதாக அமையும், தமிழரசுக் கட்சி தலைவர் விடயம் முக்கியம் பெற்று இருந்தமையால் வேறு விடயங்கள் குறித்து பேச முடியாது போனது.

இதற்கு விரைவில் முடிவு எடுத்து விட்டு தமிழ் மக்களது பிரச்சனைகள் குறித்து பேச வேண்யுள்ளது. கடந்த தேர்தலில் கட்சிகளில் இருந்து விலகி தோதலில் போட்டியிட்டவர்களுககு என்ன நடவடிக்கை எடுப்பது என்ற ஒரு கருத்தும் பேசப்பட்டது.

கட்சியில் இருந்து எவரையும் நீக்கபோவதில்லை : சுமோவுக்கு பதிலடி கொடுத்த எம்பி | Srinesan Responds To Sumanthiran Comments

சிலரது கருத்து அவர்களை கட்சி அங்கத்தவர் பட்டியலில் இருந்து நீக்கி விட வேண்டும் என்பது இருந்தாலும் அந்த கருத்து ஏகமனதான கருத்தாக இருக்கவில்லை.

அத்தோடு அதிருப்தியின் காரணமாக வெளியேறிச் சென்றவர்களும் இருக்கிறார்கள். அந்த அதிருப்திகளுக்கு என்ன காரணம் என்றும் ஆராய வேண்டியுள்ளது. ஆய்வு குழுவின் மூலம் முறையாக ஆய்வு செய்ய வேண்டும். அதன் பின் முடிவு எடுக்கப்படும்.

அத்துடன், நாடாளுமன்ற குழுவில் என்னை பேச்சாளராக அறிவித்துள்ளார்கள். அதனால் எமது கட்சியின் கருத்தியல் பற்றி நான் சொல்ல வேண்டியுள்ளது அதனை நான் செய்கின்றேன், கட்சி கூட்ட கருத்துக்களையும், நாடாளுமன்ற கருத்துக்களையும் வெளியிடுவது என்னுடைய பணியாக இருக்கும் ” என தெரிவித்துள்ளார்.

உச்சமடையும் அர்ச்சுனா மற்றும் சத்தியமூர்த்தி இடையிலான மோதல்

உச்சமடையும் அர்ச்சுனா மற்றும் சத்தியமூர்த்தி இடையிலான மோதல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

27 Oct, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024