ரணிலின் 'கொலை முகாம்' நகர்வு - சிங்கள மக்களுக்கு அபாய எச்சரிக்கை

Sri Lanka Army Parliament of Sri Lanka Ranil Wickremesinghe Shri Ashok Gajapathi Raju Pusapati
By Vanan Nov 24, 2022 04:16 PM GMT
Report

சிங்கள மக்களை - சிங்கள இளைஞர்களை கொலை செய்வதற்காக, பகிரங்கமான ஒரு ஆணையை அதிபர் ரணில் விக்ரமசிங்க வர்த்தமானி மூலம் வழங்கி வைத்திருக்கிறார்.

இதன் மூலம் மிக மோசமான இராணுவ வன்முறையை இந்த நாட்டிலே கட்டவிழ்த்து விடப்போகிறார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தெரிவித்தார்.

இன்று நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

படைத்தரப்புக்கு அதிகாரங்கள்

ரணிலின்

மேலும் உரையாற்றிய அவர், “விசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் இந்த நாட்டினுடைய படைத்தரப்புக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

அதிபர் ரணில் தன்னை ஹிட்லர் போன்று காண்பிக்க முனைவதாக பத்திரிகைகள் எல்லாம் அவரைப் பற்றி சொல்கின்றன.

நான் நினைக்கிறேன், இந்த நாட்டிலே ஒரு காலத்தில் தமிழர்களை கொன்றொழித்த படைகள், தமிழர்களை கொலை செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் இருந்த படைகள் இன்று சிங்கள மக்களை கொலை செய்வதற்காக - சிங்கள இளைஞர்களை கொலை செய்வதற்காக திசை திருப்பப்படுகிறார்கள்.

இவர் அதிபராக வருகிற பொழுது பலர் - இவர் என்ன செய்வார், இவருடைய நடவடிக்கைகள் எவ்வாறு அமையும், இவர் எப்படிப்பட்டவர் என்ற விடயங்களை எல்லாம் சொன்னார்கள்.

சொன்னதன் அடிப்படையில் தான் இன்று அதே விடயத்தை சிங்கள இளைஞர்களை கொலை செய்கின்ற பாணியிலே அவர் ஆரம்பித்திருக்கிறார்.

இன்றைய அதிபர் தான் 1989 ஆம் ஆண்டு இந்த நாட்டிலே நடந்த பல்வேறுபட்ட சம்பவங்களில் ஜேவிபி இளைஞர்களை கொலை செய்தார். பெரிய புதை குழியை வைத்திருந்தார் என்ற செய்திகள் கூட இருக்கின்றன.

கொலைக்கான வாசல்

ரணிலின்

இவர் சித்திரவதை முகாம் அல்லது கொலை முகாம்களுக்கு பொறுப்பாக இருந்த ஒருவர். இப்போது திரும்பவும் அதே பாணியில் நகர்வுளை ஆரம்பித்துள்ளார்.

அன்புக்குரிய சிங்கள இளைஞர்களே, யுவதிகளே இந்த நாட்டினுடைய அதிபர் உங்களை கொல்லப் போகிறார். அவர் கொலைக்கான வாசலை தான் திறக்கின்றார்.

இந்த நாட்டினுடைய அதிபர் ஆயுதப் படைகளை வைத்து 1989 ஆம் ஆண்டு ஆண்டிலே செய்தததைப் போன்று, 2009 ஆம் ஆண்டு தமிழர்கள் மீது நடந்ததைப் போன்று மிக மோசமான ஒரு இராணுவ வன்முறையை இந்த நாட்டிலே கட்டவிழ்த்து விடப்போகிறார் என்பதற்கு இது கட்டியம் சொல்லி இருக்கிறது.

ஆகவே மிக மோசமான ஒரு நகர்வை நோக்கி இந்த நாடு செல்கிறது” என்றார்.  

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், மதுரை, தமிழ்நாடு, India

25 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய், London, United Kingdom, Toronto, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உரும்பிராய்

24 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
மரண அறிவித்தல்

மந்துவில், மானிப்பாய், கந்தர்மடம், கொழும்பு, Burlington, Canada

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

19 Apr, 2024