காவல்துறை அத்தியட்சகர் சதீஷ் கமகேவிற்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
காவல்துறை திணைக்களத்தின் கலாசாரப் பிரிவின், சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் சதீஷ் கமகேவை (Sathish Gamage) மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, அவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ் போதரகம இன்று (2) உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் கைது செய்யப்பட்டார்
இந்நிலையில் வழக்கின் விசாரணை தொடர்பான முன்னேற்ற அறிக்கையினை அன்றைய தினம் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பல்வேறுபட்ட இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பில், இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் அவர் அண்மையில் (ஓகஸ்ட் 14) கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனையடுத்து அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

