தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு குறித்து முன்னாள் தமிழ் எம்.பி வெளியிட்ட தகவல்

Sri Lankan Tamils ITAK General Election 2024 Sri Lanka General Election 2024
By Sathangani Sep 29, 2024 11:36 AM GMT
Report

தமிழரசுக் கட்சியின் நேற்றைய அறிவிப்பின் மூலம் தமிழரசுக் கட்சியினுடையதே ஆதிக்கம் நீங்கள் வந்து சேருங்கள் என்றவாறான நிலைப்பாட்டையே கூறியிருப்பதாக யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் (D.Siddarthan) தெரிவித்துள்ளார்.

தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் பொதுச்சபை கூட்டம் வவுனியா விருந்தினர் விடுதியில் இன்று (29) இடம்பெற்றது. அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ”இன்றையதினம் பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினோம். தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக செயற்படவேண்டும் என்பது நாங்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்ற விடயம்.

தமிழ் மக்கள் பொதுச்சபை குறித்து விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

தமிழ் மக்கள் பொதுச்சபை குறித்து விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு

ஒரு கட்சி மற்றைய கட்சியின் மீது ஆதிக்கம் செலுத்துவதை விடுத்து உண்மையான கூட்டாக செயற்படவேண்டும். அன்று தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் நாங்கள் கூட்டமைப்பாக செயற்பட்ட போது பல பிரச்சினைகள் உருவாகியிருந்தது.

கடந்த உள்ளூராட்சி தேர்தலில் தாங்கள் தனியாக போட்டியிடப்போவதாக தமிழரசுக்கட்சி முடிவெடுத்திருந்தது. அதன் பின்னர் சம்பந்தனுடன் நாங்கள் கலந்துரையாட சென்றபோதும் அவர் மிகத்தெளிவாக அதே கருத்தை சொல்லியிருந்தார். நீங்கள் தமிழரசுக்கட்சியை இல்லாமல் செய்ய பார்க்கின்றீர்களா எனவும் அவர் சொன்னார்.

தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு குறித்து முன்னாள் தமிழ் எம்.பி வெளியிட்ட தகவல் | Stance Of Ilankai Tamil Arasu Kachchi Former Mp

இருப்பினும் கூட்டமைப்பை விட்டு தமிழரசுக்கட்சி சென்றாலும் நாங்கள் இயங்காமல் இருக்கமாட்டோம் தானே. அப்படி இருக்கவும் கூடாது. எனவே நாங்கள் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பினூடாக உள்ளூராட்சி தேர்தலில் வேட்புமனுவை தாக்கல் செய்தோம்.

இப்போது பல கட்சிகள் இணைந்திருக்கின்றது. அவர்கள் தான் விட்டுச்சென்றவர்கள். எனவே அவர்கள்தான் வரவேண்டும். அவர்கள் வந்தால் எமது கட்சிகளோடும், சிவில் அமைப்புகளின் கூட்டோடும் கலந்துரையாடிய பின்னரே முடிவினை எடுக்கலாம்.

தனிப்பட்ட முறையில் சொன்னால் அவர்களது வரவு இந்த கட்டமைப்பை பெரிதாக்கும். அது எனக்கும் விருப்பம். அனைவரும் இணைவது தமிழ்மக்களுக்கு பலமாகவும் இருக்கும். ஆனால் அவர்கள் சொல்லியிருப்பது தமிழரசுக்கட்சி சின்னத்தில் என்று.

தமிழரசுக் கட்சியின் மத்திய குழு தீர்மானம் குறித்து வெளியான தகவல்

தமிழரசுக் கட்சியின் மத்திய குழு தீர்மானம் குறித்து வெளியான தகவல்

 தமிழரசுக் கட்சியினுடைய ஆதிக்கம்

இது பழையபடி தமிழரசுக் கட்சிதான் முடிவெடுக்கப்போகின்றது என்ற அடிப்படையிலும், ஆதிக்கம் தமிழரசுக் கட்சியினுடையதே நீங்கள் சேருங்கள் உங்களுக்கு நாங்கள் பார்த்து தருவோம் என்றவாறான ஒரு நிலைப்பாட்டையே கூறியிருக்கிறார்கள். அப்படியான நிலைப்பாட்டில் நாங்கள் போகமுடியாது.

தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு குறித்து முன்னாள் தமிழ் எம்.பி வெளியிட்ட தகவல் | Stance Of Ilankai Tamil Arasu Kachchi Former Mp

அனைவரும் சமபங்காளிகளாக ஒரு கூட்டமைப்பாக இணைந்தால் அதில் சேரமுடியும். அதற்கான நேரகாலம் இருக்கின்றதோ தெரியாது. அவர்கள் மூன்று நாட்களையே அவகாசமாக கொடுத்துள்ளனர்.

ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு சங்கு சின்னத்தை எடுப்பதற்கான ஒரு அபிப்பிராயம் இருந்தது. அதற்கான முயற்சியினை செய்வதாக தீர்மானித்திருக்கின்றோம். அதனை செய்வோம்.

அத்துடன் இளைஞர்களையும் நிச்சயமாக உள்ளே கொண்டுவரவேண்டும். அதேபோல அனுபவம் உள்ளவர்களும் இருக்கவேண்டும். இருந்தாலும் அப்படி ஒரு கருத்தாக்கம் மக்கள் மத்தியில் இல்லை.

தேர்தலில் தாங்கள் போட்டியிடுவதற்காக சிலர் உருவாக்கும் ஒரு கருத்தே இது. இது கட்சிகளை பலவீனப்படுத்துகின்ற ஒரு விடயம். நாங்கள் கடந்த முறையும் இளைஞர்களை நிறுத்தியிருந்தோம். இப்போதும் நிச்சயமாக இளைஞர்கள் கேட்பார்கள்.

கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்களுக்கு தமிழரசுக் கட்சி விடுத்துள்ள அழைப்பு

கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்களுக்கு தமிழரசுக் கட்சி விடுத்துள்ள அழைப்பு

பொதுசபைக் கூட்டம்

தமிழ் கட்சிகள் பிரிந்து நிற்பது பிரதிநித்துவத்தில் நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தும். அதற்காகவே ஒரு கூட்டமைப்பை உருவாக்கவேண்டும் என்று பார்க்கின்றோம். சிலர் சேரமுடியாத நிலை இருக்கிறது. குறிப்பாக டக்ளஸ் தேவானந்தாவும் நாங்களும் சேருவது கஸ்டமான விடயம்.

தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு குறித்து முன்னாள் தமிழ் எம்.பி வெளியிட்ட தகவல் | Stance Of Ilankai Tamil Arasu Kachchi Former Mp

அரசுடன் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இருந்தால் அரசாங்கம் சொல்வதையே சொல்லவேண்டிய சங்கடம் இருக்கிறது. எமது சார்பாக கதைக்க முடியாது. மௌனியாகவே இருக்கவேண்டும். அபிவிருத்தி பணிகள் செய்யலாம். ஆனால் 1956 இற்குப் பின்னர் நியாயமான ஒரு தீர்வினை நோக்கியே தமிழ்மக்கள் வாக்களித்து வருகின்றனர்“ என தெரிவித்தார்.

இதேவேளை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் பொதுசபைக் கூட்டம் வவுனியாவில் உள்ள வாடி வீட்டில் கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையில் இடம்பெற்றது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளராக நாகலிங்கம் இரட்ணலிங்கத்தை பொதுச் சபையினால் உத்தியோகபூர்வமாக தெரிவு செய்யும் செயற்பாடு இன்று இடம்பெற்றதுடன் கட்சியினுடைய அடுத்த கட்ட செயற்பாடுகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பொதுத்தேர்தலில் வாக்காளர்களுக்கு ஆணைக்குழு வழங்கியுள்ள வாய்ப்பு

பொதுத்தேர்தலில் வாக்காளர்களுக்கு ஆணைக்குழு வழங்கியுள்ள வாய்ப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



ReeCha
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
நன்றி நவிலல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
நன்றி நவிலல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023