சீனாவுடனான உடன்படிக்கையால் இலங்கைக்கு ஏற்பட்ட நிலை
ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் சீனாவுடன் இலங்கை செய்து கொண்ட உடன்படிக்கையின் பின்னர், இலங்கையுடனான நட்புறவை பல நாடுகள் தள்ளிவைத்து கையாள்வதன் காரணமாகவே சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐ.எம்.எப்) இருந்து கடன் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார்.
இந்தியா,அவுஸ்ரேலியா ஜப்பான்அமெரிக்கா, பர்மா, ஐரோப்பா போன்ற பல நாடுகள் இலங்கையுடன் நெருக்கத்தை கையாள விரும்பவில்லை. இது இலங்கையை தனிமைப்படுத்தும் செயலாக அமைந்துவிட்டது என்றார்.
2017ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக, அமைச்சர் பதவியில் இருந்து கூட தான் நீக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
பல நாடுகளை புண்படுத்திய இலங்கை
ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் ஜப்பானுடன் செய்து கொண்ட இலகு ரயில் ஒப்பந்தம் எவ்வித ஆய்வும் இன்றி இரத்துச் செய்யப்பட்டதுடன், இலங்கை இவ்வாறு பல நாடுகளை புண்படுத்தியதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச நாணய நிதியத்தில் கடன் பெற்றாலும், நாட்டின் பொருளாதாரத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. ஆனால், வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவழைப்பது போல், உலகின் பிற நாடுகளும் நம் நாட்டின் மீது நம்பிக்கை வைக்கவேண்டும் என்றார்.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி
இந்த நாடு மற்றும் பிற நாடுகளுடன்
வர்த்தகம் செய்ய முடியும், நமது
நாட்டிற்கான கடன் தொகையைப்
பெறுவதன் மூலம் சாதகமான
சூழ்நிலைகள் ஏற்படும் என்றார்.
எவ்வாறாயினும், எதிர்வரும் இரண்டு
மாதங்களுக்குள் இலங்கைக்கு சர்வதேசநாணய நிதியத்தின் கடன் உதவி
கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளியிட்டார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
