இந்தியா - இலங்கை பயணிகள் கப்பல் சேவை! தமிழ்நாடு அரசின் அதிரடி திட்டம்
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான பயணிகள் கப்பல் சேவைகளை வலுப்படுத்தும் மற்றொரு முக்கிய நடவடிக்கையாக, தமிழ்நாட்டில் உள்ள நாகப்பட்டினம் துறைமுகத்தில் அமைந்துள்ள சர்வதேச பயணிகள் முனையத்தில் சுங்கவரி இல்லாத வர்த்தக வசதிகளை அறிமுகப்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தியா-இலங்கை கப்பல் வழித்தடத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்த புதிய முயற்சியின் முக்கிய நோக்கம், துறைமுகத்தில் பயணிகளின் அனுபவத்தை ஒரு சர்வதேச விமான நிலையம் மற்றும் சர்வதேச கடல்சார் முனையத்தின் தரத்திற்கு நெருக்கமாகக் கொண்டு வருவதே என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கடல்சார் சபையால் (TNMB) உருவாக்கப்பட்ட இந்த முனையம், நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறைக்கு இடையே பயணிகள் படகு சேவைகளை எளிதாக்கும் என கூறப்படுகிறது.
முக்கியமான பயண வழித்தடம்
2024 ஓகஸ்ட் மாதத்தில் இதன் செயல்பாடுகள் தொடங்கியதிலிருந்து, இந்த சேவை சுற்றுலாப் பயணிகள், யாத்ரீகர்கள், வணிகர்கள் மற்றும் இரு நாடுகளைச் சேர்ந்த இந்திய, இலங்கை புலம்பெயர்ந்த சமூகத்தினருக்கு மிகவும் முக்கியமான பயண வழித்தடமாக மாறியுள்ளதாக தெரியவருகிறது.

எல்லை தாண்டிய கடல்சார் இணைப்புகளுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிடும் அதிகாரிகள், இதுவரை இந்த வழித்தடத்தில் 25,000-க்கும் மேற்பட்ட பயணிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.
வரிவிலக்குக் கடைகள்
இந்த நிலையில், முன்மொழியப்பட்ட இந்த வரிவிலக்குக் கடைகள், இந்திய அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளின்படி, சுங்க வரிகள் மற்றும் பிற வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களை சர்வதேச பயணிகள் வாங்குவதை இலகுபடுத்தும்.

அதன்படி, அதற்கான ஏற்பாடுகள் ஜூலை மாதம் தொடங்கும் என்றும், அடுத்த ஆறு மாதங்களுக்குள் கடைகளை முழுமையாகத் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் இந்த நடவடிக்கை, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சுற்றுலா மற்றும் கடல்வழி வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றும், பயணிகளின் வசதியை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 3 நாட்கள் முன்