உயா் தர மேலதிக வகுப்புக்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை - சுரேன் ராகவன்
Sri Lanka
Suren Raghavan
Education
By Beulah
உயா் தர மேலதிக வகுப்புக்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தொிவித்துள்ளாா்.
கொழும்பில் நேற்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், உயர்தர வகுப்புகளில் அறவிடப்படும் கட்டணம், அந்த வகுப்புகளில் வெளியிடப்படும் விடயங்கள் உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு இந்த ஒழுங்குமுறையை மேற்கொள்ள எதிா்பாா்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் செப்டெம்பர்
இதேவேளை, இவ்வருட உயர்தரப் பரீட்சையில் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவா்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கப்படுவார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளாா்.
