மன்னாரில் கடலின் நடுவே மணல்திட்டில் சிக்கியிருந்த குழந்தைகள், பெண்கள் உட்பட 11 பேர் மீட்பு
தலைமன்னார் கடற்பகுதியில் உள்ள மணல் திட்டில் சிக்கியிருந்த 11 பேர் கொண்ட குழுவினரை இன்று (செப்டம்பர் 05, 2026) மீட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
தலைமன்னார் கடற்பகுதியில் ரோந்துப் பணியின் போது இந்தக் குழுவினர் காணப்பட்டனர், மேலும் சிக்கியிருந்த அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
இந்திய அகதி முகாம்களில் இருந்து கடல்வழியாக திரும்பியவர்கள்
நான்கு பெண்கள், ஒரு ஆண் மற்றும் மூன்று சிறுவர்கள் இவ்வாறு மீட்கப்பட்டனர்.

இந்தக் குழுவினர், இந்தியாவில் உள்ள அனயூர் மற்றும் ஒக்கூர் அகதிகள் முகாம்களில் இருந்து ராமேஸ்வரம் வழியாக வந்திருந்ததாகவும், முன்னர் இந்தியாவில் தஞ்சம் கோரியிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை தந்தை மற்றும் அவரின் 11 மற்றும் 13 வயதுடைய இரண்டு சிறுவர்களும் இன்றையதினம் மணல்திட்டில் இரந்து கடற்படையால் மீட்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக தலைமன்னார் காவல்துறையிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.
images credit - sri lanka navy
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |