மட்டக்களப்பில் அதிபரால் கொடூரமாக தாக்கப்பட்ட மாணவர்: காவல்துறையின் அசமந்தம்

Sri Lanka Police Batticaloa Sri Lanka
By Shalini Balachandran Oct 05, 2025 08:16 AM GMT
Report

மட்டக்களப்பில் (Batticaloa) பாடசாலை மாணவர் ஒருவர் அதிபரினால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.

காத்தான்குடி, மட்/மம/ ஜாமியுழ்ழாபிரீன் வித்தியாலயத்தில் ஐந்தாம் தரத்தில் கல்வி கற்றுவரும் மாணவர் ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

குறித்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (03) இடம்பெற்றுள்ளது.

நெடுந்தீவு மக்களுக்கு அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்

நெடுந்தீவு மக்களுக்கு அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்

கொடூரமாக தாக்குதல்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தாக்குதலுக்கு உள்ளான மாணவருக்கும் மற்றும் அதே வகுப்பில் கல்வி கற்று வரும் மற்றுமொரு மாணவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் அதிபரால் கொடூரமாக தாக்கப்பட்ட மாணவர்: காவல்துறையின் அசமந்தம் | Student Brutally Beaten By Principal In Batticaloa

இதையடுத்து, மோதலில் ஈடுபட்ட இரு மாணவர்களும் அதிபரிடம் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

தாக்குதலில் ஈடுபட்டவரில் ஒரு மாணவர் ஆசியர் ஒருவரின் மகன் என தெரிவிக்கப்படுகின்றது.

மனம்பேரி தொடர்பில் ராஜபக்சர்களின் சகா வெளியிட்ட தகவல்

மனம்பேரி தொடர்பில் ராஜபக்சர்களின் சகா வெளியிட்ட தகவல்

பலத்த காயம் 

இந்தநிலையில் தன்னை அடித்துவிட்டதாக ஆசிரியரின் மகன், மற்றைய மாணவர் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதன்பின்பு, முழு விவரத்தையும் கேட்டு அறியாமல் உடனே அதிபர் மற்றைய மாணவரை கொடூரமாக தாக்கியுள்ளார்.

மட்டக்களப்பில் அதிபரால் கொடூரமாக தாக்கப்பட்ட மாணவர்: காவல்துறையின் அசமந்தம் | Student Brutally Beaten By Principal In Batticaloa

மாணவரின் பின் தலையில் பொல்லு போன்ற ஒன்றினால் மிகவும் பலமாக தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் கை மற்றும் கால்களிலும் தாக்கப்பட்டுள்ள நிலையில் மாணவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

உக்ரைனில் தொடருந்தில் ரஷ்ய இராணுவத்தின் கொடூர தாக்குதல்: கொத்தளித்த ஜெலன்ஸ்கி

உக்ரைனில் தொடருந்தில் ரஷ்ய இராணுவத்தின் கொடூர தாக்குதல்: கொத்தளித்த ஜெலன்ஸ்கி

காவல்துறையில் முறைப்பாடு

இருப்பினும் இதனை உடனடியாக வீட்டில் தெரிவிக்காத மாணவர், தன்னால் வலி தாங்க முடியாத நிலையில் பெற்றோரிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளார்.

அத்துடன் தாக்குதலுக்கு உள்ளான அன்று இரவு மாணவருக்கு மிகவும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.


இதையடுத்து, வைத்தியசாலையில் மாணவரை அனுமதித்த பெற்றோர் சம்பவம் தொடர்பில் காவல்துறையில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற அன்றே காவல்துறையில் முறைப்பாட்டை முன்வைத்தும் தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் குற்றச்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அரச அதிகாரிகளுக்கான வாகன அனுமதி - எழுந்துள்ள சிக்கல்

அரச அதிகாரிகளுக்கான வாகன அனுமதி - எழுந்துள்ள சிக்கல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி