மாணவன் மீது காவல்துறை கடும் தாக்குதல்
களுத்துறை,(kalutara) பயாகல பிரதேசத்தில் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த 16 வயதுடைய பாடசாலை மாணவன் மீது பயாகல காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதலை அடுத்து குறித்த மாணவன் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தந்தையின் மோட்டார் சைக்கிளில் நண்பருடன் சென்ற மாணவன்
பயாகல பிரதேசத்தை சேர்ந்த இப்பாடசாலை மாணவன் நேற்று (07) பிற்பகல் தனது தந்தையின் மோட்டார் சைக்கிளில் தனது நண்பருடன் கடையொன்றுக்கு சென்றுள்ளார்.

இதனைக் கண்ட பயாகலை காவல்துறை நடமாடும் அதிகாரிகள் இருவர் அவர்களை துரத்திச் சென்று மோட்டார் சைக்கிளை நிறுத்தி மோட்டார் சைக்கிளின் அருகில் வந்து திட்டியுள்ளனர்.
துரத்திச் சென்று காவல்துறை அதிகாரிகள் தாக்குதல்
காவல்துறை அதிகாரிகளை பார்த்து பயந்துபோன மாணவன் உறவினர் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களை மீண்டும் துரத்திச் சென்ற காவல் துறையினர், மோட்டார் சைக்கிளின் பின்னால் சென்ற மாணவனையும், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற பள்ளி மாணவனையும் பல முறை அடித்தனர். அப்போது, கீழே விழுந்த மாணவனையும் உதைத்ததாக, மாணவன் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்கு உள்ளான மாணவனின் தந்தை களுத்துறை சிரேஷ்டகாவல்துறை அத்தியட்சகர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |