யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று கண்டனப் போராட்டம் (படங்கள்)
முல்லைத்தீவு - அக்கரைவெளி காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறான காணி சுவீகரிப்பிற்கு எதிராக தொடர்ந்தும் போராட்டங்கள் இடம்பெறும் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளனர்.
எமது நிலம் எமக்கு வேண்டும்

முல்லைத்தீவு - அக்கரைவெளியிலுள்ள 1500 ஏக்கர் காணி மகாவலி அபிவிருத்தித் அதிகார சபையினால் சுவீகரிக்கப்பட்ட நிலையில் தற்போது சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
இதற்கு எதிராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்று(31) மாலை 4 மணியளவில் ஒன்று கூடிய பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இடம்பெற்றது.
இதன்போது மகாவலி அபிவிருத்தித் அதிகார சபையே நிலங்களை அபகரிக்காதே, எமது நிலம் எமக்கு வேண்டும் என பல்வேறு கோஷங்களை எழுப்பியிருந்தனர்