இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா இடையேயான கிரிக்கெட் போட்டி! மைதானத்துக்குள் நுழைந்த பாம்பு
Cricket
India
Indian Cricket Team
By pavan
இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா இடையேயான இரண்டாவது டீ20 போட்டி அசாம் மாநிலத்தின் கவுகாதியில் நடைபெற்றது.
அந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த போது ஏழாவது ஓவரில் திடீரென மைதானத்திற்குள் பாம்பு ஒன்று நுழைந்தது.
பாம்பு மைதானத்திற்குள் நுழைந்ததை கவனித்த தென்னாப்பிரிக்க வீரர்கள் சற்று அதிர்ச்சி அடைந்து உடனடியாக இது குறித்து நடுவரிடம் தெரிவித்தனர்.
பாம்பு பிடிப்பவர்கள்
பாம்பு செல்லும் பகுதியில் இருந்து விலகிய வீரர்கள் பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர். அதன் பிறகு பாம்பு பிடிப்பவர்கள் விரைந்து வந்து மைதானத்திற்குள் சுற்றிய பாம்பை பிடித்து சென்றனர்.
இதனிடையே மைதானத்திற்குள் பாம்பு நுழைந்ததால் தடைப்பட்ட ஆட்டம் சிறிது நேரம் கழித்து மீண்டும் தொடங்கியது.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி