முதலமைச்சர் கனவிற்காக துருப்பு சீட்டாக்கப்பட்ட காணி விவகாரம்: சுமந்திரனின் இரகசிய நகர்வு
உள்ளூராட்சி மன்ற தேர்தலையடுத்து தற்போது மாகாண சபை மீது அனைத்து அரசியல் தரப்புக்களின் பார்வையும் திரும்பியுள்ளது.
தென்னிலங்கை உட்பட வடக்கு மற்றும் கிழக்கிலும் தம்முடைய அரசியல் எதிர்காலத்தை நிலைநாட்ட சில அரசியல் தலைமைகள் இரகசியமாக பலதரப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் தமிழர் பிரதேசத்தில் முக்கிய அரசியல் தலைமையாக கருத்தப்படும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனின் (M. A. Sumanthiran) சில நடவடிக்கைகளும் அண்மைக்காலமாக பேசுப்பொருளாக மாறியுள்ளது.
கடந்த (2025.03.28) ஆம் திகதி, தமிழர் காணிகள் உரிமை கோரப்படாவிட்டால் அரச காணிகளான பிரகடனப்படுத்துவது தொடர்பில் வர்த்தமானியொன்று வெளியாகி இருந்தது.
இந்த காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிராக சட்ட ஆலோசனை முகாமொன்று சுமந்திரன் தலைமையில் 25 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டிருந்தது.
முகாமில், 30 வரையான சட்டத்தரணிகளும் 15 சட்டப்பீட மாணவர்களும் கலந்து கொண்டிருந்ததுடன் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன், சயந்தன் மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
சுமந்திரனின் இந்நடவடிக்கை, தமிழர் காணி விவகாரத்தை கட்சிதமாக பயன்படுத்தி வடக்கில் முதலமைச்சர் ஆசனத்தை கைப்பற்றுவதற்கு அவர் பாதை அமைப்பதாக காணப்படுகின்றது.
இந்தநிலையில், சுமந்திரனின் இந்நடவடிக்கையின் பின்னணி, தமிழ் மக்களின் காணி அபகரிப்பு, தமிழர் பிரதேச அரசியல் நகர்வு மற்றும் சமகால அரசியல் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய செய்தி நிழச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
