சுமந்திரனின் கோரிக்கைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கடும் எதிர்ப்பு

sumanthiran tna tamilnadu vck
By Sumithiran Apr 10, 2022 06:45 PM GMT
Report

இலங்கையில் தமிழர்கள் மட்டுமல்லாது அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தமிழக அரசு உதவ வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரிக்கை வைத்த நிலையில், இந்த கருத்தை அவர்கள் மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையில் தமிழ் மக்களுக்கு மட்டும் தமிழக அரசு உதவிகளை வழங்கினால் பிளவு ஏற்படும் என்றும் இலங்கை மக்கள் அனைவருக்கும் உதவ வேண்டும் என்றும் தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடுமையான போராட்டங்கள் இலங்கை முழுவதும் நடைபெற்று வருகின்றன. அனைத்து மக்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் போராட்டக் களத்தில் அங்கங்கே இன வேறுபாடின்றி மக்கள் ஒன்றாகத் திரண்டு தமது எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர்.

இதனிடையே இலங்கை அரசுக்கு பல்வேறு நாடுகளும் உதவிகளைச் செய்து வருகின்றன. இந்திய அரசும் பல்வேறு உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறது. ஆனால் ஏற்கனவே இருக்கும் இனப்பாகுபாடு காரணமாக இந்த நிவாரணம் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சமமாக சென்று சேர வாய்ப்பில்லை.

இதனால் தமிழர்கள் அதிக அளவில் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. இதை உணர்ந்துதான் தமிழ் மக்களுக்கு நேரடியாக உதவிகளைச் செய்வதற்கு இந்திய அரசின் அனுமதியைத் தமிழ்நாடு முதலமைச்சர் கோரியிருந்தார். அதற்கு இதுவரை மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை.

இதற்கிடையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சுமந்திரன் ஊடகங்களில் ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார். அதில், “ பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்திருக்கும் தமிழ் மக்களுக்கு அவசியமான உதவிகளை வழங்க முன்வந்த தமிழக முதலமைச்சர் எம் கே ஸ்டாலினுக்கு முதலில் நன்றி கூறுகின்றோம். ஆனால் தற்போது இலங்கையில் வாழும் அனைத்து மக்களும் உணவுப் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கி இருக்கிறார்கள்.

அது மாத்திரமின்றி சிங்கள மக்கள் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோரும் நிலை உருவாகி இருப்பதுடன் அனைவரும் ஒன்றிணைந்து தமது உரிமைகளுக்காகப் போராடுகின்றார்கள். எனவே, ஒரு சுமுகமான சூழ்நிலை உருவாகி வரும் போது தமிழ் மக்களுக்கு மாத்திரம் உதவிகளை வழங்குவது இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்திவிடும்.

ஆகவே, நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்திருக்கும் ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் உதவிகளை வழங்குமாறு அவரிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்” என்று சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார் (தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ.கணேசனும் இதே கருத்தை ட்விட்டர் மூலமாகப் பகிர்ந்திருக்கிறார்.)

இந்தக் கருத்துக்கள் அவர்களது தொலைநோக்குப் பார்வையைக் காட்டுகின்றனவா அல்லது அவர்களுக்கு சிங்கள அரசியல் கட்சிகள் மூலமாகத் தரப்பட்டிருக்கும் அழுத்தத்தை வெளிப்படுத்துகின்றனவா என்ற கேள்வி எழுகிறது.

இலங்கை அரசு ஒரு பேரினவாத அரசு என்பதையோ, அந்தத் தன்மை இந்த நெருக்கடி காலத்திலும் மாறிவிடவில்லை என்பதையோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மறுக்கமாட்டார்கள். இலங்கை அரசின் இனவாதத் தன்மை கட்டமைப்பு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

எனவே அரசின் திட்டங்கள், நிவாரண உதவிகள் எதுவாக இருந்தாலும் அந்த கட்டமைப்பின் ஊடாகத்தான் செயல்படுத்தப்படும். எனவே தமிழ் மக்கள் அதில் புறக்கணிக்கப்படுவார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

இதனைப் புரிந்துகொண்டிருப்பதால்தான் தமிழ்நாடு முதலமைச்சர் ஈழத்தமிழ் மக்களுக்கு நேரடியாக உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். இது ஈழத் தமிழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதே ஆகும்.

தமிழ் கூட்டமைப்பின் தலைவர்கள் தெரிவித்திருக்கும் கருத்து இப்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடியின் காரணமாக இன வேற்றுமைகள் மறைந்து மக்களுக்கு இடையே ஒற்றுமை ஏற்பட்டு விட்டது போலவும், அதன் காரணமாக இலங்கை அரசும் தனது தன்மையை மாற்றிக் கொண்டு விட்டது போலவும் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குகிறது.அதுமட்டுமின்றி தமிழ்நாடு அரசு எடுத்திருக்கும் முன் முயற்சியைத் தடுப்பதாகவும் இருக்கிறது.

பேரினவாதத்தால் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கும் சிங்கள மக்களின் வெறுப்பைக் குறைக்க அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கும் இந்தச் சூழலில் போராட்ட களத்தில் தமிழர்களும் சிங்கள மக்களோடு ஒன்றிணைந்து நிற்கவேண்டும். ஆனால் அதே நேரத்தில் தமது உரிமைகளை அவர்கள் விட்டுக்கொடுத்துவிடக்கூடாது. தமிழ்நாடு அரசின் வழியாக இந்திய அரசை வலியுறுத்தி அதற்கான அழுத்தத்தை இலங்கை அரசுக்குக் கொடுக்கவேண்டும். அதற்கு உகந்த தருணம் இது.

வடக்கு மாகாண கவுன்சிலும் இலங்கை அரசால் முடக்கப்பட்டுள்ள நிலையில் இதுவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னுரிமையாக இருக்கவேண்டும். இந்த உண்மைகள் தெரிந்திருந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்படி கருத்து தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இது, தமிழ்நாடு அரசு இனி ஈழத்தமிழர் பிரச்சனையில் தலையிட்டு எந்த கருத்தையும் சொல்ல இடமில்லாமல் ஆக்குவதோடு தமிழ்நாடு முதலமைச்சர் இலங்கை மக்களிடையே பிளவை உண்டாக்குகிறார் என்ற அவதூறுக்கும் வழிகோலுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது கருத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும்” என்று கூறியுள்ளார்.

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
18ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, கரணவாய் மேற்கு

09 Dec, 2007
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

19 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிங்கப்பூர், Singapore, அளவெட்டி, மல்லாகம், Newbury Park, United Kingdom, Wickford, United Kingdom

28 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுவில், Vancouver, Canada, Scarborough, Canada

15 Nov, 2025
நன்றி நவிலல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம், கொழும்பு

16 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

28 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், திருகோணமலை, Randers, Denmark

30 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

16 Nov, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், வெள்ளவத்தை

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், கோப்பாய், Ontario, Canada

14 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
நன்றி நவிலல்

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், உடுப்பிட்டி, Worthing, United Kingdom

13 Nov, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
மரண அறிவித்தல்

பெரியபளை, கல்கிசை, கனடா, Canada

13 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், ஏழாலை, Bad Harzburg, Germany

10 Nov, 2025
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Bremen, Germany

10 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

15 Nov, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Markham, Canada

10 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Les Pavillons-sous-Bois, France

05 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், சண்டிலிப்பாய், London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025