விரைவில் பூமிக்கு திரும்பவுள்ள சுனிதா வில்லியம்ஸ்
விண்வெளி ஆய்வுக்காக விண்வெளி சென்ற சுனிதா வில்லியம்ஸ்(Sunita Williams) மற்றும் புட்ச் வில்மோர் அடுத்தமாதம் பூமிக்குத்திரும்புவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5ஆம் திகதி போயிங் ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் ஆய்வுக்காக விண்வெளி ஆய்வுமையம் சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் 10 நாட்களில் பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டு இருந்தது.
எனினும், தொழில்நுட்ப கோளாறால் அவர்களால் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்ட நிலையில் கடந்த 6 மாதத்துக்கும் மேலாக அவர்கள் விண்வெளி ஆய்வு மையத்தில் சிக்கியுள்ளனர்.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்
இந்நிலையில், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை மீட்டுக் கொண்டு வருவதற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விரைவில் விண்கலம் ஒன்றை அனுப்ப உள்ளது என நாசா அறிவித்திருந்தது.
இதேவேளை, விண்வெளியில் இருந்தபடியே சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர், "நாசாவின் க்ரூ-10 விண்கலம் மார்ச் 12 ஆம் திகதி பூமியில் இருந்து விண்ணுக்கு ஏவப்படும் என்றும் மார்ச் 19 ஆம் திகதி நாங்கள் பூமிக்கு திரும்புவோம்" என்று தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
