இரண்டாவது நாளாக தொடரும் வேலைநிறுத்தம் : நோயாளர்கள் அவதி
நிறைவுகாண் மருத்துவ நிபுணர்கள் நாடளாவிய ரீதியில் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கின்றது.
நிறைவு காண் இரத்த பரிசோதனை, எக்ஸ்ரே கதிர்வீச்சு, மருந்தகம் உள்ளிட்ட மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் தொழிற்சங்கங்களே இவ்வாறு வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளன.
இந்த வேலை நிறுத்தம் காரணமாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் அசௌகரியத்திற்குள்ளாகியுள்ளனர்.
48 மணி நேர வேலைநிறுத்தம்
இந்த 24 மணி நேர வேலைநிறுத்தம் நேற்று (05) காலை 8.00 மணிக்கு தொடங்கி இன்று காலை 08.00 முடிவடைய திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், நேற்று நிறைவு காண் மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழு, வேலைநிறுத்தத்தை 48 மணி நேரம் வரை தொடர முடிவு செய்தது.
பதவி உயர்வுகள், வார இறுதி மற்றும் விடுமுறை கொடுப்பனவுகள், பட்டதாரி ஆட்சேர்ப்பு சிக்கல், சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான ஒப்பந்தங்களை புறக்கணித்தல், ஓய்வூதிய நிபந்தனைகள் மற்றும் பயிற்சிகள் போன்ற பிரச்சினைகளை முன்னிறுத்தி இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
You may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
