சுரேஸ் சாலே - சதிக்கோட்பாட்டு CO! சாலேக்கு 3 மாத காவல் வருமா..
தமிழர்களின் அரசியல் உரிமை கருவறுப்புக்காக ராஜபச்ச அதிகார மையத்தின் மடியில் 3 சதிக்கோட்பாட்டு சூத்திரதாரிகள் இருந்த கதை பிரபலமானது.
பிரான்ஸின் புகழ்பெற்ற படைப்பாளி அலக்ஸ்சான்டர் டுமா 1844 இல் எழுதிய இன்றளவும் புகழ்பெற்ற Les Trois Mousquetaires (மூன்று முஸ்கைத்தயர்கள்) கதையில் வரும் 3 பாத்திரப்படைப்புகளின் எதிர்மறையில் இந்த 3 சதிக்கோட்பாட்டு சூத்தரிதாரிகள் இருந்தனர்.
புலனாய்வுதலைகளான கபில ஹெந்த விதாரண, சுரேஷ் சாலே. மற்றும் ரொஹான் குணரத்ன ஆகியோரே இந்த தலைகள் இதில் முக்கிய தலைக்கிடாயாக சிறிலங்கா படையபுலனாயவுத்துறையில் மிக நீண்ட காலம் பணியாற்றிய கபில ஹெந்தவிதாரண, இருந்தார்.
இவர் சீனாவின் ஒரு உளவாளி என்ற கதைகள் இருந்தன. இரண்டாவது இடத்தில் அவரது புலானாய்வு மூளை வாரிசாக கருத்தப்பட்ட சுரேஷ்சாலே இருந்தார்.
முன்றாவது முகம் கொஞ்சம் வித்தியாசமாக மாத்திய யோசி பாணியில் பேராசிரியார் சக பாதுகாப்பு ஆய்வாளர் போர்வையில் ரொஹன் குணரத்தின என்ற பெயரில் சிங்கப்பூரில் இருந்தது.
இந்த ரொகான் குணரட்ணாவுக்கு என்னதான் பேராசிரியர் -பாதுகாப்பு ஆய்வாளர் என்ற வெளிப்பூச்சு இருந்தாலும் கனடாவுக்குள் நுழையவும் இவருக்கு தடையிருப்பது வேறுவிடயம்.
தமிழர்களை கருவருக்கும் திட்டங்களின் சூத்திரங்கள் முதல் ராஜபச்சகளின் அதிகாரத்துவத்ககாக இலங்கையில் இன மத மோதல்களுக்குரிய ஸ்பெசல் சதிக்கோட்பாடுகளை வரையான (மடி)கனங்கள் இருந்த இந்த 3 முகங்களில் ஒரு முகமான சுரேஸ் சாலேதான் இப்போது உள்ளேயுள்ள நிலையில் அவருக்கா மடிக்கன கதறல்கள் வரும் நிலையில் இந்தவிடயங்களை தாங்கிவருகிறது செய்திவீச்சு …
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |