அரகலயவால் கடுமையான சோதனைக்கு உள்ளான சலேவின் உளவு வலையமைப்பு!

Gotabaya Rajapaksa Suresh Salley
By Dharu Jun 16, 2026 10:45 AM GMT
Report

அரச புலனாய்வுச் சேவை (SIS) என்பது இலங்கை முழுவதும் பரவியுள்ள மிகவும் விரிவான மற்றும் சிக்கலான புலனாய்வு வலையமைப்பை இயக்கும் ஒரு நிறுவனமாகும்.

அதன் கள முகவர்கள், நாட்டின் ஒவ்வொரு கட்டளையகத்திலிருந்தும் கொழும்பில் உள்ள பிரதான தலைமையகத்திற்கு நேரடியாக அறிக்கை அளிக்கின்றனர்.

ஒரு பொதுவான பாதுகாப்புச் சூழலில், அரச புலனாய்வுச் சேவையானது ஒரு முக்கியமான முன்கூட்டிய எச்சரிக்கைப் பாத்திரத்தை வகிக்கிறது.

அதாவது, நாட்டில் நடைபெறும் எந்தவொரு அரசியல், குடிமக்கள் அல்லது மாணவர் போராட்டம் குறித்த முன்கூட்டிய உளவுத் தகவல்களை, அது பொதுமக்களுக்குத் தெரியவருவதற்கு முன்பே நிர்வாக மற்றும் காவல்துறைத் தலைவர்களுக்கு வழங்குவதாகும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை : கைதை தடுக்க நீதிமன்றை நாடியுள்ள கோட்டாபய

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை : கைதை தடுக்க நீதிமன்றை நாடியுள்ள கோட்டாபய

தேசியப் பாதுகாப்பின் இரகசியத்தன்மை

உத்திசார் மட்டத்தில், தேசியப் பாதுகாப்பிற்கான உள் மற்றும் வெளி அச்சுறுத்தல்களை மதிப்பிடுவதும், முக்கிய அரசாங்க நிறுவனங்களின் நிலைத்தன்மையை ஆய்வு செய்வதும் அவர்களின் பொறுப்பாகும்.

அரகலயவால் கடுமையான சோதனைக்கு உள்ளான சலேவின் உளவு வலையமைப்பு! | Suresh Salleys Spy Network

தேசியப் பாதுகாப்பின் இரகசியத்தன்மையைப் பாதுகாக்கும் பொருட்டு, அவர்கள் அரச உளவுத்துறையின் செயல்பாட்டு நுட்பங்களைப் பகிரங்கமாக விமர்சிப்பதைத் தவிர்த்தாலும், தேசியப் பாதுகாப்பு அமைப்புக்கு அரச உளவுத்துறைத் தலைவரின் பொறுப்பு எவ்வளவு தீவிரமானது மற்றும் முக்கியமானது என்பதைப் புரிந்துகொள்வது அவசியமாகும்.

விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பான உளவுத் தகவல்களைக் கையாளும் பொறுப்பை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவிடம் ஒப்படைத்திருந்தால், அவர் அதை மிகவும் மோசமாகக் கையாண்டிருப்பார் என ஓய்வுபெற்ற சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.

நாட்டில் கொழுந்துவிட்டு எரிந்த உள்நாட்டுக் யுத்தத்தில் முன்னறிவிப்புகளைத் துல்லியமாகப் புரிந்துகொள்ளத் தவறிய ஒரு உளவுத்துறைத் தலைவருக்கு, ஆயுதமேந்திய சவாலை எதிர்கொள்வதற்கான வியூகத் தொலைநோக்குப் பார்வை இல்லை என்றும் தற்கால இராணுவத் திட்டமிடுபவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

விடுதலைப்புலிகளை திருப்திப்படுத்தவே சலே கைது: கொந்தளிக்கும் சரத் வீரசேகர

விடுதலைப்புலிகளை திருப்திப்படுத்தவே சலே கைது: கொந்தளிக்கும் சரத் வீரசேகர

சுரேஷ் சலேயின் உளவுத்துறை

2022-ஆம் ஆண்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க "மக்கள் போராட்டத்தின்" போது சுரேஷ் சலேயின் உளவுத்துறைத் தலைமை அதன் மிகக் கடுமையான சோதனைக்கு உள்ளானது.

அரகலயவால் கடுமையான சோதனைக்கு உள்ளான சலேவின் உளவு வலையமைப்பு! | Suresh Salleys Spy Network

ஜனாதிபதியின் அசைக்க முடியாத நம்பிக்கையைப் பெற்றிருந்தபோதிலும், சலேயின் உளவுத்துறை மதிப்பீடுகள் நிஜ உலகச் சூழலுடன் முற்றிலும் தொடர்பில்லாதவையாகவும், குறைபாடுடையவையாகவும் இருந்தன. அவை ஆட்சியைத் திக்குமுக்காடச் செய்து, இறுதியில் அதன் வீழ்ச்சியை விரைவுபடுத்தின.

மார்ச் மாத இறுதியில், கொழும்பின் புறநகர்ப் பகுதிகளில் அமைதியான மெழுகுவர்த்தி ஏந்திய போராட்டங்கள் தோன்றத் தொடங்கின. மார்ச் 31 அன்று மிரிஹானாவில் உள்ள ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லத்தில் எதிர்பாராத விதமாகப் பெருந்திரளான மக்கள் கூடியபோது, ​​களப் பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கையடைந்து ஜனாதிபதியை எச்சரித்தனர்.

ஜனாதிபதி உடனடியாக அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் நாயகத்திடம் நிலைமை குறித்து விசாரித்தார்.

சலேவின் மதிப்பீடு “ஐயா, கவலைப்பட வேண்டாம். இது ஒரு சிறிய, ஒழுங்கமைக்கப்படாத போராட்டம் மட்டுமே.” என்றார்

ஆனால் யதார்த்தம் என்னவென்றால்: சில மணி நேரங்களிலேயே, நிலைமை தலைகீழாக மாறியது, மேலும் அப்பகுதி ஒரு வன்முறை மோதல் மண்டலமாக மாறியது.

பாதுகாப்புத் தடைகளை உடைத்துக்கொண்டு, கூட்டம் காவல்துறையினருடன் மோதியது, இராணுவப் பேருந்துகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன, இது நாட்டை ஒரு பெரும் பாதுகாப்பு நெருக்கடிக்குள் தள்ளியது. பொதுமக்களின் இந்த திடீர் அணிதிரட்டல் குறித்து அரச புலனாய்வுத் தலைவருக்கு எதுவும் தெரியாமல் இருந்தது.

கொழும்பின் காலி முகத்திடல் சதுக்கத்தில் பொதுமக்களின் கோபம் பெருகத் தொடங்கியபோது, ​​போராட்டக்காரர்களின் நீண்டகாலத் திட்டங்கள் குறித்த புலனாய்வு முன்னறிவிப்பை ஜனாதிபதி ராஜபக்ச மீண்டும் சல்லேவிடம் கேட்டார்.

சல்லேவின் மதிப்பீடு: “ஐயா, இது ஒரு தற்காலிகப் போராட்டம். அவர்கள் சிறிது நேரம் முழக்கமிடுவார்கள், சமூக ஊடகங்களில் புகைப்படங்களைப் பதிவிடுவார்கள், பின்னர் சென்றுவிடுவார்கள்.”

உண்மை என்னவென்றால், போராட்டக்காரர்கள் ஏப்ரல் 9 அன்று காலி முகத்துவாரத்தை விட்டு வெளியேறவில்லை. மாறாக, அவர்கள் அங்கு “கோட்டா கோ கம” என்ற பெயரில் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட, நிரந்தரமான ஒரு கூடார நகரத்தை அமைத்தனர்.

தங்கக் கடன்களுக்கான உச்ச வரம்பு...! அறிக்கையில் வெளியான தகவல்

தங்கக் கடன்களுக்கான உச்ச வரம்பு...! அறிக்கையில் வெளியான தகவல்

கொழும்பை ஆக்கிரமித்த மக்கள்

இலவச உணவுக்கூடங்கள், நூலகங்கள், மருத்துவ மையங்கள் மற்றும் தெரு நாடக நிகழ்ச்சிகளுடன் கூடிய இந்த இடம், பல மாதங்கள் நீடித்த ஒரு மாபெரும் மக்கள் எதிர்ப்பின் அசைக்க முடியாத மையமாக மாறியது. பொதுமக்களின் உறுதியின் ஆழத்தை அரச புலனாய்வு சேவையால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.

அரகலயவால் கடுமையான சோதனைக்கு உள்ளான சலேவின் உளவு வலையமைப்பு! | Suresh Salleys Spy Network

ஜூலை முதல் வாரத்திற்குள், நாடு முழுவதும் சிதறிக்கிடக்கும் மக்கள் கொழும்பை ஆக்கிரமிக்க பெரும் ஆயத்தங்களைச் செய்து வருவதை சுயாதீன ஊடகங்களும் திறந்த மூல வலைப்பின்னல்களும் தெளிவாகக் காட்டின.

ஜூலை 8 அன்று, ஜனாதிபதி ஒரு அவசரகால பாதுகாப்பு உச்சிமாநாட்டைக் கூட்டினார். அதில் முப்படைகளின் தளபதிகள், பாதுகாப்புச் செயலாளர், அப்போதைய காவல்துறை தலைமை ஆய்வாளர், சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மற்றும் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே ஆகியோர் கலந்துகொண்டனர்.

சலேவின் மதிப்பீடு: "ஐயா, எமது உளவுத்துறை அறிக்கைகளின்படி 15,000 முதல் 20,000 பேர் மட்டுமே வருகிறார்கள், இது சமாளிக்கக்கூடிய எண்ணிக்கையாகும்.

யதார்த்தம், என்றவென்றால் ஜூலை 9 ஆம் திகதி காலைக்குள், அந்த உளவுத்துறை அறிக்கை தகர்க்கப்பட்டது.

சலேவின் முடிவுகளுக்கு முற்றிலும் முரணாக, இலட்சக்கணக்கான மக்கள் கொழும்புக்குள் தொடருந்துகளையும் பேருந்துகளையும் நிரப்பி வெள்ளமெனப் படையெடுத்து வந்தனர்.

தொலைக்காட்சி அலைவரிசைகளில் அவர்கள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டனர்.

இலட்சக்கணக்கான குடிமக்கள் கொழும்பு கோட்டையை முற்றுகையிட்டு, பலத்த ஆயுதம் தாங்கிய பாதுகாப்புத் தடைகளை புழுதியைப் போல உடைத்துக்கொண்டு முன்னேறினர்.

இந்த மாபெரும் நெருக்கடியின் உச்சத்தில், களத்தில் இருந்த ஒரு தளபதி உடனடியாகத் தலையிட்டு ஜனாதிபதியிடம், "ஐயா, தயவுசெய்து தொலைக்காட்சியைப் பாருங்கள்" என்றார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொலைக்காட்சியை இயக்கியபோது, ​ நேரடி ஒளிபரப்பின் வழியாக, ஜனாதிபதி மாளிகையின் வாயில்களை உடைத்துக்கொண்டு ஒரு மாபெரும் மக்கள் வெள்ளம் நுழைவதைக் கண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

விடுதலைப்புலிகளை திருப்திப்படுத்தவே சலே கைது: கொந்தளிக்கும் சரத் வீரசேகர

விடுதலைப்புலிகளை திருப்திப்படுத்தவே சலே கைது: கொந்தளிக்கும் சரத் வீரசேகர

பாதுகாக்கப்பட்ட அதிகாரி

நிலைமையின் தீவிரத்தையும், தனது உளவுத்துறை அமைப்பு முற்றிலுமாகச் செயலிழந்துவிட்டதையும் உணர்ந்த ஜனாதிபதி, மிகவும் துரதிர்ஷ்டவசமான முறையில் உடனடியாக அவரது அரச இல்லத்தை செய்ய நிர்பந்திக்கப்பட்டார்.

அரகலயவால் கடுமையான சோதனைக்கு உள்ளான சலேவின் உளவு வலையமைப்பு! | Suresh Salleys Spy Network

அவர் முதலில் கடற்படைத் தலைமையகத்திற்கு சென்றார், பின்னர் பலத்த பாதுகாப்புடன் ஒரு கடற்படைக் கப்பலில் ஏறி திருகோணமலை கடற்படைத் தளத்திற்குத் தப்பிச் சென்றார், இறுதியாக நாட்டை விட்டு வெளியேறினார்.

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே ராஜபக்ச ஆட்சியால் மிகவும் பாதுகாக்கப்பட்ட அதிகாரியாக இருந்தபோதிலும், அவர் நாட்டின் நிர்வாகத்திற்கும் ஆயுதப் படைகளின் தலைவருக்கும் துல்லியமான, நடைமுறைக்கு உகந்த மற்றும் பாரபட்சமற்ற உளவுத் தகவல்களை வழங்கத் தவறினார் என்பதே அரசியல் ஆய்வாளர்களின் குற்றச்சாட்டு.

இது அரசின் பாதுகாப்பு அமைப்பை பலவீனப்படுத்தியதுடன், முப்படைத் தளபதியின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தியது.

இலங்கையின் பாதுகாப்புப் படைகளுக்குள் இருக்கும் விமர்சகர்கள், ஒரு முன்னணி புலனாய்வுத் தலைவரிடம் எதிர்பார்க்கப்படும் பகுப்பாய்வு அல்லது வியூகச் சிந்தனை சலேவிடம் இல்லை என்று சுட்டிக்காட்டுகின்றனர்.

தலைமைக்குக் கடுமையான உண்மைகளை எடுத்துரைப்பதற்குப் பதிலாக, அவரது பதவிக்காலம் ஆபத்துக்களைக் குறைத்து மதிப்பிடுவதாலும், ஆட்சியாளர்களை மகிழ்விக்க ஆறுதலான கதைகளை வழங்குவதாலும் வகைப்படுத்தப்பட்டது.

இறுதியில், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க புலனாய்வுத் தோல்வியானது, நவீன இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் சக்திவாய்ந்த மக்கள் எழுச்சியின் முகத்தில் அந்த ஆட்சியை முற்றிலும் முடக்கி, உதவியற்ற நிலைக்குத் தள்ளியது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்