மீண்டும் இலங்கைக்கான சேவைகளை ஆரம்பித்த சுவிஸ் விமான சேவை
சுவிஸர்லாந்தின் சுவிஸ் சர்வதேச விமான சேவை, இலங்கைக்கான தனது சேவையை மீண்டும் ஆரம்பித்துள்ளது.
இதற்கு அமைய கடந்த 2019 ஆம் ஆண்டுக்கு பின்னர், சுவிஸ் சர்வதேச விமான சேவையின் முதலாவது விமானம் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
சுவிஸர்லாந்தின் சூரிச் நகரில் இருந்து வந்த 4WK-64 என்ற இந்த விமானத்தில் 96 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், விமானனிகள் உட்பட 12 விமானப் பணியாளர்களும் வந்துள்ளனர்.
சுவிஸ் சர்வதேச விமான சேவை நிறுவனம் இன்று முதல் வாரத்தில் ஒரு நாள் இலங்கைக்கான விமான சேவையை நடத்தவுள்ளது.
இதனப்படி பிரதி வெள்ளிக் கிழமை தோறும் சூரிச் நகரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேரடியான விமான சேவை இடம்பெறவுள்ளது. விமானம் மற்றும் அதில் வந்தவர்களை வரவேற்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைபவம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.