விடுதலைப்புலிகளின் மறைந்த போராளிகளின் படங்களை வைக்க கலைக்கூடம் -அனுமதி அளித்தது சுவிஸ் அரசாங்கம்
விடுதலைப் புலிகளின் மறைந்த போராளிகளின் படங்களை வைக்கும் வகையில் சுவிட்சர்லாந்தின் பேர்க் நகரில் கலைக்கூடம் ஒன்றை செயற்படுத்த சுவிஸ் அரசாங்கம் அனுமதி அளித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த கௌசல்யனின் பெயர் இந்த கலைக்கூடத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த கலைக்கூடத்தில் போரில் உயிரிழந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களின் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய நாடொன்றில் விடுதலைப்புலிகளின் உயிரிழந்த உறுப்பினர்களின் படங்கள் காட்சிப்படுத்தும் ஒரே கலைக்கூடம் இதுதான்.
விடுதலைப் புலிகளை தடைசெய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்க சுவிஸ் நீதிமன்றம் மறுத்ததையடுத்து சுவிஸ் புலிகளுக்கு கலைக்கூடம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.