யாழில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம்: காவல்துறையினர் மீது தாக்குதல்: இருவர் காயம்
யாழில் (Jaffna) தனியார் விருந்தக மதுபானசாலை ஒன்றில் இரண்டு இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இளைஞர் இருவர் வாள்வெட்டில் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (16.09.2025) இரவு 7 .00 மணியளவில் யாழ். நெடுந்தீவு பகுதியில் உள்ள தனியார் விருந்தக மதுபானசாலையில் இடம்பெற்றுள்ளது.
தப்பிச் செல்ல முற்பட்ட போது கைது
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நெடுந்தீவு மதுபானசாலையில் நேற்று இரவு 7.00 மணியளவில் திடீரென புகுந்த இளைஞர் குழு மதுபானசாலைக்குள் இருந்த இளைஞர் குழு மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டதில் இரண்டுபேர் தலையிலும் முகத்திலும் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மீது வாள்வெட்டு குழுவினர் தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட போது ஒருவர் கைது செய்யப்பட்டு நெடுந்தீவு காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்
தப்பிச் சென்றவர்கள் தேடி கைது செய்யும் நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
பொதுமக்களை அச்சுறுத்திய குழு
இதேவேளை, வீதியால் சென்ற பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக வாள்வெட்டுக் குழுவினர் மோட்டார் சைக்கிளில் பயணித்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
மேலும், குறித்த மதுபானசாலையில் இதற்கு முன்னரும் தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
