யாழ்ப்பாணத்தில் துரத்தி துரத்தி வாள்வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்
யாழ்ப்பாணம் - அச்சுவேலி, மகிழடி வைரவர் கோவில் பகுதியில் இன்று மாலை இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், இரு குழுக்களுக்கிடையில் தொடர்ச்சியாக முறுகல் நிலை இருந்து வருவதாக அச்சுவேலி காவல்துறையினர் கூறுகின்றனர்.
துரத்தி துரத்தி வாள்வெட்டு
இந்த நிலையில் ஒரு குழுவைச் சேர்ந்த இளைஞன் அச்சுவேலி நகருக்கு வந்திருந்த நிலையில், மற்றைய குழுவைச் சேர்ந்தவர்கள் அவரை துரத்தி துரத்தி வாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவத்தில் பாரதி வீதி பத்தமேனியைச்் சேர்ந்த 27 வயதான இளைஞன் ஒருவரே வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில், அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் சிக்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக அச்சுவேலி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
