சிரியா மக்களின் புகலிடக்கோரிக்கை : ஐரோப்பிய நாடுகளின் அதிரடி அறிவிப்பு

Syria Europe World
By Shalini Balachandran Dec 10, 2024 08:39 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

சிரியா (Syria) மக்களின் புகலிடக் கோர்க்கை விண்ணப்பங்கள் மீதான முடிவுகளை ஐரோப்பிய நாடுகள் நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஷர் அல்-அசாத் (Bashar al-Assad) ஆட்சியில் இருந்து வீழ்த்தப்பட்ட நிலையில் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 2011 இல் சிரியாவில் வெடித்த உள்நாட்டுப் போரினால் ஐரோப்பிய நாடுகளில் அகதிகள் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்த நிலையில் இது பல ஐரோப்பிய நாடுகளின் அரசியலில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

சிரிய ஜனாதிபதி குடும்பத்துக்கு சொந்தமான ரகசிய பதுங்கு குழி : வெளியான காணொளி

சிரிய ஜனாதிபதி குடும்பத்துக்கு சொந்தமான ரகசிய பதுங்கு குழி : வெளியான காணொளி

சிரியாவின் நிலை

தற்போது அசாத்தின் கொடுங்கோலாட்சி முடிவுக்கு வந்ததை அடுத்து, வன்முறையில் இருந்து தப்பி ஓடியவர்களில் பலர் நாடு திரும்பலாமா என்று யோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிரியாவின் நிலை மிக வேகமாக மாறிவரும் சூழலில், பல நாடுகள் புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்களை பரிசீலிப்பதை நிறுத்தியுள்ளன.

சிரியா மக்களின் புகலிடக்கோரிக்கை : ஐரோப்பிய நாடுகளின் அதிரடி அறிவிப்பு | Syrian People Asylum Request
ஆஸ்திரியாவில் அமையவிருக்கும் புதிய அரசாங்கம் தற்போது சிரியா மக்களை வெளியேற்றுவது குறித்து திட்டம் வகுத்து வருகிறது.

ஆனால் பிரித்தானியா அப்படியான ஒரு முடிவுக்கு வரவில்லை என்றாலும், விண்ணப்பங்களை பரிசீப்பதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

ரஷ்யாவிற்கு எப்படி தப்பினார் சிரிய ஜனாதிபதி : வெளிவந்தன தகவல்

ரஷ்யாவிற்கு எப்படி தப்பினார் சிரிய ஜனாதிபதி : வெளிவந்தன தகவல்

சொந்த நாடு 

அதுமட்டுமின்றி, பல எண்ணிக்கையிலான சிரியா மக்கள் சொந்த நாடு திரும்புவதை எதிர்பார்ப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சிரியா மக்களுக்கு பெரும் ஆதரவு தெரிவித்து வந்த நாடான ஜேர்மனி தற்போது, முடிவுகளை நிறுத்தி வைத்துள்ளது.

சிரியா மக்களின் புகலிடக்கோரிக்கை : ஐரோப்பிய நாடுகளின் அதிரடி அறிவிப்பு | Syrian People Asylum Request

நோர்வே, இத்தாலி, டென்மார்க், கிரீஸ் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளும் சிரிய அகதிகள் மீதான முடிவுகளை நிறுத்தி வைத்துள்ளன.

அத்தோடு, இதேபோன்ற முடிவை விரைவில் எடுக்க பிரான்ஸ் அரசு திட்டமிட்டுள்ள நிலையில் 2019 இல் மட்டும் பிரித்தானியாவில் 48,000 சிரியா மக்கள் வசித்து வந்தனர்.

கனடாவில் வைத்தியர்களுக்கு பற்றாக்குறை : வெளியான தகவல்

கனடாவில் வைத்தியர்களுக்கு பற்றாக்குறை : வெளியான தகவல்

புலம்பெயர்ந்தவர்கள் 

இதில் பெரும்பாலானோர் அகதிகளாக புலம்பெயர்ந்தவர்கள் அல்ல, 2011 இல் இந்த எண்ணிக்கை வெறும் 9,200 என இருந்துள்ளதுடன் 2011 மற்றும் 2021 இற்கு இடையில், கிட்டத்தட்ட 31,000 சிரியா மக்களுக்கு பிரித்தானியாவில் அடைக்கலம் அளிக்கப்பட்டது.

2011 இல் வெடித்த உள்நாட்டுப் போருக்கு பின்னர் 14 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளதுடன் அதில் சரிபாதி பேர்கள், சிரியாவின் பாதுகாப்பான பகுதிகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.

சிரியா மக்களின் புகலிடக்கோரிக்கை : ஐரோப்பிய நாடுகளின் அதிரடி அறிவிப்பு | Syrian People Asylum Request

சுமார் 5.5 மில்லியன் மக்கள் துருக்கி, லெபனான், ஈராக், ஜோர்டான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் புலம்பெயர்ந்துள்ளனர்.

2021 இல் வெளியான தரவுகளின் அடிப்படையில் சுமார் ஒரு மில்லியன் சிரிய மக்கள் அகதிகளாகவும் புகலிடக்கோரிக்கையாளர்களாகவும் ஐரோப்பா நடுகளில் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் 59 சதவிகித சிரிய மக்களை ஜேர்மனி ஏற்றுக்கொண்டுள்ளதுடன் 11 சதவிகித மக்களை ஸ்வீடன் ஏற்றுக்கொள்ள, எஞ்சிய ஐரோப்பிய நாடுகள் ஐந்து சதவிகிதத்திற்கும் குறைவான மக்களை ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கனடாவில் பயங்கர ஆயுதங்களுடன் தமிழ் தம்பதி கைது

கனடாவில் பயங்கர ஆயுதங்களுடன் தமிழ் தம்பதி கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   

ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம் கிழக்கு

08 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாவலடி, Vitry-sur-Seine, France, Paris, France

09 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Lewisham, United Kingdom, Lee, United Kingdom, Orpington, United Kingdom

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சென்னை, India

08 Sep, 2013
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்