நல்லூர் கோயில் வளாகத்திலிருந்து அகற்றப்பட்ட ரி20 உலக கிண்ணம்!
ரி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் கிண்ணம் யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர் கந்தசுவாமி கோயில் வளாகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
ரி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற உள்ளதால், கிண்ணம் இன்று(01) யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டது.
கிண்ணத்தை யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகம், நல்லூர் கந்தசுவாமி கோயில், துரையப்பா மைதானம், யாழ்ப்பாண கோட்டை மற்றும் யாழ்ப்பாண பொது நூலகம் உள்ளிட்ட பல இடங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்க திட்டமிடப்பட்டிருந்தது.
அவமரியாதைக்குரிய செயல்கள்
எனினும், கிண்ணத்தை நல்லூர் கோயில் வளாகத்திற்குள் கொண்டு சென்றபோது, அதை வெளியே எடுக்க கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

கோயில் வளாகத்திற்குள் காணொளிகள் படம்பிடிப்பது மற்றும் சிலர் காலணி அணிந்து கோயில் வளாகத்திற்குள் நுழைவது போன்ற சில செயல்கள் அவமரியாதைக்குரியவை என்றும் கோயிலின் புனிதத்தை மீறுவதாகவும் கோயில் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன் விளைவாக, கோயில் வளாகத்திலிருந்து கிண்ணத்தை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதேவேளை, கோயிலின் மீது பறக்கும் ட்ரோன் கமராவை அகற்றவும் கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை…
3 நாட்கள் முன்