தமிழ் பொது வேட்பாளர் : சாணக்கியனுக்கு சிவாஜிலிங்கம் சவால்
சுய நிர்ணய உரிமை என்றால் என்ன, எப்படி சுயநிர்ணய உரிமையை பாவிப்பது என்பதை முதலில் சொல்லவேண்டும். இதனை முதலில் தெரிவித்து விட்டு தமிழ் பொது வேட்பாளரை பற்றி கதைக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிடம்(shanakiyan rasamanickam) தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய எம்.கே.சிவாஜிலிங்கம்(m.k.shivajilingam) சவால் விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று (24) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்குறித்த சவாலை விடுத்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
சுய நிர்ணய உரிமை என்பது அந்த மக்கள் தம்மைத் தாமே ஆளவேண்டும் அதற்காக நடத்தப்படுவதே வாக்கெடுப்பு. ஆரம்பத்தில் முடியாது என்றே பலரும் தெரிவிப்பார்கள்.ஏமாறுவதற்கும் ஒரு அளவு வேண்டும் என அவர் தெரிவித்தார்.
அவர் தெரிவித்த மேலதிக விடயங்கள் காணொளியில்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |