இந்திய அகதி முகாமில் இருந்து தயாகம் திரும்பிய குடும்பம்
தமிழகத்தில் (Tamil nadu) அகதிகளாக தங்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மீண்டும் கடல் வழியாக இலங்கைக்கு திரும்பியுள்ளனர்.
இவ்வாறு நாடு திரும்பிய அவர்கள் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மன்னாரைச் சேர்ந்த இவர்கள் இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக கடல் வழியாக படகில் சென்று தமிழகத்தில் அடைக்கலம் கோரிய நிலையில் நீண்ட நாட்களாக முகாமில் வசித்து வந்துள்ளதாக தெரியவருகிறது.
பிணையில் செல்ல அனுமதி
இலங்கையில் போர் நிறைவடைந்த நிலையில் இயல்பு வாழ்வு திரும்புவதான செய்தியில் அடிப்படையில் நேற்று முன் தினம் (14) இரவு தமிழ் நாட்டில் இருந்து படகில் புறப்பட்டு மன்னார் பேசாலை கடற்பரப்பை வந்தடைந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் தாமாகவே பேசாலை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதையடுத்து குறித்த நால்வரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
