ஈழத்தமிழர்களுக்கு நேர்ந்த கொடூரங்கள் : அமெரிக்காவிலிருந்து ஒலித்த குரல்
தமிழின படுகொலையின் போது இடம்பெற்ற கொடூரங்கள் மீளநிகழாமையை உறுதி செய்யவேண்டும் என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டொன் டேவிஸ் (don davis) வலியுறுத்தியுள்ளளார்.
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 16 ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றும் என்றும் நாங்கள் ஈழத்தமிழர்கள் சமூகத்தினர் உயிர் பிழைத்தவர்கள் அவர்களுடைய குடும்பத்தவர்கள் தொடரும் ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டுள்ளவர்களுடன் ஐக்கியமாக இருக்கிறோம்.
தமிழ் இனப்படுகொலை
இலங்கை அரசாங்கத்திடமிருந்து அவர்கள் தங்கள் துயரங்களுக்கு நீதியை கோரும் வேளை நாங்கள் தமிழ் மக்கள் குறித்தும் அவர்கள் அனுபவித்த விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்.
அனைவரின் உரிமைகளையும் கௌரவத்தையும் மதிக்கும் அமைதித் தீர்வுக்காக நாங்கள் பரப்புரை செய்ய வேண்டும்.
தமிழ் இனப்படுகொலையின் போது இடம்பெற்ற அட்டூழியங்கள்மீள நிகழாமையை உறுதி செய்ய வேண்டும்.
நாங்கள் அனைவரும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இருப்போம் என டும் என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டொன் டேவிஸ் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
