அரசியல் இருந்து ஒதுங்க தயார் : கஜேந்திரகுமார் அதிரடி அறிவிப்பு

Gajendrakumar Ponnambalam Political Development Current Political Scenario
By Shalini Balachandran Jan 29, 2025 07:37 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

ஒற்றையாட்சி அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டால் அதன்பின் தேசியம் பேசி பயனில்லை எனவும் தானும் அரசியலில் இருந்து ஒதுங்கி விடுவேன் எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் வடக்கு மாகாண ஊடகவியலாளர்ளுக்கு தெளிவூட்டும் கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணத்தில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்று (28) இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

யாழ். நகரில் மீட்கப்பட்ட காணாமல் போன பிரான்ஸ் பிரஜை

யாழ். நகரில் மீட்கப்பட்ட காணாமல் போன பிரான்ஸ் பிரஜை

தற்போதைய அரசாங்கம்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிக்கையில், “தற்போதைய அரசாங்கமானது அறுதிப் பெருமபான்மையுடன் உள்ளது இந்த அரசாங்கம் மக்கள மத்தியில் தனது இருப்பை தக்க வைக்க ஏதாவது செய்ய வேண்டியுள்ளது.

அதனடிப்படையில் விரைவாக ஒரு அரசியலமைப்பை கொண்டு வர வாய்ப்புள்ளது அறுதிப் பெரும்பான்மையுடன் இருப்பதால் இந்த அரசாங்கம் கொண்டு வரும் அரசியலமைப்பை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும்.

அரசியல் இருந்து ஒதுங்க தயார் : கஜேந்திரகுமார் அதிரடி அறிவிப்பு | Tamil Mp Opinion On The Unitary Constitution

வடக்கு - கிழக்கு ரீதியில் 19 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள் அதில் தேசியம் என்ற அடிப்படையில் 10 பேர் இருக்கின்றோம்.

குறைந்த பட்சம் இந்த அரசாங்கம் கொண்டு வரும் ஒற்றையாட்சி அரசியலமைப்பை தேசியம் பேசுகின்ற 10 பேராவது எதிர்க்காவிட்டால் தமிழ் தேசிய கட்சிகளின் ஆதரவுடன் இரு நிறைவேற்றப்பட்டதாக கருதப்படும், அதன் பின் நாம் தேசியம் பேசி பயனில்லை.

மட்டுநிலத்தை ஆக்கிரமிக்க நடந்த கொக்கட்டிச்சோலைப் படுகொலை…!

மட்டுநிலத்தை ஆக்கிரமிக்க நடந்த கொக்கட்டிச்சோலைப் படுகொலை…!

தேசிய இனப்பிரச்சனை

குறிப்பாக இலங்கை சுதந்திரமடைந்ததில் இருந்து 3 அரசியலமைப்பு சீர்திருத்தங்களை எமது தமிழ் தலைமைகள் எதிர்த்து வந்துள்ளனர் அதன் காரணமாகவே தமிழ் தேசிய இனப் பிரச்சனை இன்னும் தீர்க்கப்பட வில்லை என்ற நிலை சர்வதேச சமூகம் மத்தியில் உள்ளது.

நாம் புதிய அரசியலமைப்பை தமிழ் தேசிய் கட்சிகள் ஏற்றுக் கொண்டால் 76 வருடமாக தமிழ் தலைமைகளும், விடுதலைப் புலிகளும் தமிழ் மக்களன் அபிலாசைகளுக்காக செய்த அத்தனை தியாகங்களும் வீணாகிவிடும்.

அரசியல் இருந்து ஒதுங்க தயார் : கஜேந்திரகுமார் அதிரடி அறிவிப்பு | Tamil Mp Opinion On The Unitary Constitution

எனவே, தமிழ் தேசிய கட்சிகள ஒன்று சேர்ந்து ஒற்றையாட்சி அரசியலமைப்பை எதிர்த்து வடக்கு - கிழக்கு தமிழர் தேசம் என அங்கீகரிக்கப்பட்ட, தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையுடன கூடிய ஒரு அரசியலமைப்பை கோர வேண்டும்.

நாடு பிரிக்கப்படாது அது வழங்கபடுமாக இருந்தால் சமஸ்டி ஊடாக மட்டுமே அதனை வழங்க முடியும் எனவே அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் இந்த விடயத்தில் ஒன்றுபட வேண்டும்.

சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளோருக்கு வெளியான அறிவிப்பு

சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளோருக்கு வெளியான அறிவிப்பு

ஒற்றையாட்சி அரசியலமைப்பு

அத்துடன், ஒற்றையாட்சி அரசியலமைப்பு நடைமுறைக்கு கொணடு வந்தால் அதனை சர்வசன வாக்குரிமைக்கு விட வேண்டும், இதன்போது வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாசைகளை உணர்ந்து ஒற்றையாட்சி அரசியலமைப்பை எதிர்க்க வேண்டும்.

தமிழ் தேசிய கட்சிகள மீது உள்ள வெறுப்பால் பாடம் புகட்ட வேண்டும் என கடந்த தேர்தல்களில் வேறு கட்சிகளுக்கும், குழுக்களுக்கும் வாக்களித்து இருந்தாலும கூட, அரசியலமைப்பு விடத்தில் ஒன்று பட வேணடிய தேவை உள்ளது.

அரசியல் இருந்து ஒதுங்க தயார் : கஜேந்திரகுமார் அதிரடி அறிவிப்பு | Tamil Mp Opinion On The Unitary Constitution

இது எமது அடிப்படை உரிமைப் பிரச்சனை அதனை மக்கள் விளங்கிக் கொள்ள வேணடும், ஊடகங்கள அதனை மககளுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

ஒற்றையாட்சி அரசியலமைபபு நிறைவேற்றப்படுமாக இருந்தால் அதன்பின் கட்சிகள தமிழ் தேசியம் என்ற பெயரை வைப்பதாலும், தேசியம் பேசுவதாலும் எந்த பயனும் இல்லை.

நானும் அரசியலில் இருந்து ஒதுங்கி விடுவேன். அதன் பின் தமிழ் மக்களுக்கு எந்த விமோசனசனமும் இல்லை, 76 வருட போராட்டம் தோல்வி கண்டதாக முடியும் இந்த ஆபத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

நகை வாங்கவுள்ளோர் கவனத்திற்கு : அதிரடி மாற்றம் கண்ட தங்க விலை

நகை வாங்கவுள்ளோர் கவனத்திற்கு : அதிரடி மாற்றம் கண்ட தங்க விலை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, இளவாலை, Toronto, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

10 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், ஜேர்மனி, Germany

12 Aug, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம் கிழக்கு

08 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்