இலங்கை கடற்பரப்பில் கைதான தமிழக மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு
arrest
sri lanka
fishermen
tamil nadu
Extension of interrogation
By Vanan
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் விளக்கமறியல் பெப்ரவரி 1ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 20ஆம் திகதி கைது செய்யப்பட்ட 13 மீனவர்கள் , மறுநாள் ஊர்காவல்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு , நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இன்றைய தினம்(18) செவ்வாய்க்கிழமை மூன்றாவது தவணையாக குறித்த வழக்கு ஊர்காவல்துறை நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது , குறித்த 13 மீனவர்களின் விளக்கமறியலை எதிர்வரும் பெப்ரவரி 1ஆம் திகதி வரையில் நீடித்து நீதவான் உத்தரவிட்டார்.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 2 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்