சர்வதேசத்தை ஏமாற்றும் சிறிலங்கா: நம்பிக்கையை இழக்கும் தமிழ் மக்கள்! செல்வம் எம்.பி சுட்டிக்காட்டு
தமிழ் மக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மீதான நம்பிக்கை குறைந்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னார் ரெலோ கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
சிறிலங்கா அரசாங்கம் ஏமாற்றுதல்
ஐக்கிய நாடுகள் சபை வலுவான அல்லது ஆக்கபூர்வமான தீர்மானங்களை கொண்டுவந்து இந்த சிறிலங்கா அரசாங்கத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு மனித உரிமை மீறல்களுடன் சம்மந்தப்படவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்பதும் எமது மக்களின் கோரிக்கையாகவும் ஆவலாகவும் உள்ளது.
ஆனாலும் ஐ.நா சபையிலே தீர்மானங்கள் வருகின்ற போதேல்லாம் சிறிலங்கா அரசாங்கம் ஐ.நா சபையை ஏமாற்றுகின்ற வகையிலே காலங்கள் கொடுக்கப்படாலும் அவற்றை நடைமுறைப்படுத்தாது தொடர்ந்தும் கால நீடிப்பைப் பெறுவதற்கான உத்திகளை கையாண்டு வருகின்றது.
அதற்கேற்ற வகையில் ஐ.நா சபையும் அவர்களுக்கு வாய்பை வழங்கும் விதமாகவே நடந்து கொள்கின்றார்கள்.
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை
எனவே தொடர்சியாக ஐக்கிய நாடுகள் சபை அறிக்கைகளை வெளியிடுவதை நிறுத்தி விட்டு அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதற்கு முயற்சி எடுக்க வேண்டும். அதே நேரம் இந்தியாவும் இலங்கையில் 13ஆவது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு தெரிவித்துள்ளது.
ஆனாலும் சிறிலங்கா அரசாங்கம் இதை நடைமுறைப்படுத்துவதை விடுத்து சர்வதேசத்தை ஏமாற்றும் விதத்தில் செயற்படுவதுடன் ஐக்கிய நாடுகள் சபையில் நேரடியாக சாட்சியம் வழங்கும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள், மற்றும் காணி ஆக்கிரமிப்பு, மனித உரிமை மீறல் விடயங்கள் தொடர்பான சாட்சியங்களை வலுவற்றதாக மாற்றுகின்ற விதத்தில் ஐ. நாவை ஏமாற்றி வருகின்றது.
ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு எதிராக காட்டமான அற்றிக்கைகளை வெளியிடும் போது தமிழ் மக்களுக்கு ஆறுதலாக இருந்தாலும் அவை நடைமுறைபடுத்தப்படாத பொழுது அவர்கள் ஏமாற்றம் அடைக்கின்றனர்.
எனவே இந்த நிலை மாற வேண்டும் என்றால் ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச நீதி மன்றத்தில் இலங்கையில் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டவர்களை நிறுத்த வேண்டும் என்பதுடன் தமிழ்மக்களின் நியாயமான தீர்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.
