திலீபனின் நினைவூர்தி பேரணிக்கு யார் அனுமதி கொடுத்தது..! கொந்தளிக்கும் இனவாத எம்.பி

Sri Lankan Tamils Government Of Sri Lanka Ethnic Problem of Sri Lanka Udaya Gammanpila
By Vanan Sep 19, 2023 04:17 AM GMT
Report

திலீபனின் நினைவூர்தி பேரணி என்பது இனவாதத்தையும் மக்கள் மத்தியில் குரோதத்தையும் ஏற்படுத்தும் சதித்திட்டமாகும் என பிவிதுறு ஹெல உறுமயவின் தலைவரும், இனவாதத்தைக் கக்கும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்பன்பில தெரிவித்துள்ளார்.

நினைவூர்தி பேரணி தொடர்பில் நேற்று(18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு கூறிய அவர், காடையர்களின் தாக்குதலை நியாயப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

யார் அனுமதி கொடுத்தது?

அவர் மேலும் தெரிவிக்கையில், “திலீபன் என்பவர் யார்? நாட்டை பிளவுபடுத்தும் விடுதலைப் புலிகள் அமைப்பின் முயற்சிக்கு தலைமை தாங்கியவர்.

திலீபனின் நினைவூர்தியை விடாது துரத்தும் புலனாய்வாளர்கள்(படங்கள்)

திலீபனின் நினைவூர்தியை விடாது துரத்தும் புலனாய்வாளர்கள்(படங்கள்)

திலீபனின் நினைவூர்தி பேரணிக்கு யார் அனுமதி கொடுத்தது..! கொந்தளிக்கும் இனவாத எம்.பி | Thileeipan S Memorial Rally Udaya Gammanpila

பிரிவினைவாதத்தையும் தீவிரவாதத்தையும் நாட்டில் பரப்பும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நோக்கத்திற்காக தமது உயிரை பலி கொடுத்த ஒருவராவார்.

விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது இந்த நாட்டில் தடை செய்யப்பட்ட இயக்கமாகும்.

சிவப்பு மஞ்சள் கொடிகளால் வாகனம் ஒன்றை அலங்கரித்து அதில் திலீபனின் பாரிய நிழற்படம் ஒன்றை வைத்துக்கொண்டு கிழக்கில் இருந்து வட மாகாணத்திற்கு வாகனப் பேரணி ஒன்றை மேற்கொள்வதற்கு யார் அனுமதி கொடுத்தது?

எவரேனும் ஒரு உத்தியோகத்தர் அதற்கு அனுமதி வழங்கியிருப்பாராயின் அவர் இலங்கை அரசியலமைப்பின் 157 சரத்தை முழுமையாக மீறி பிரிவினைவாதத்தை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான நிலை : கூட்டமைப்பு மீது விசனம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான நிலை : கூட்டமைப்பு மீது விசனம்

மூன்று தசாப்தங்களாக விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண சிங்கள மக்களின் கிராமங்களுடாக இவர்கள் பயணித்தமை கட்டாயமாக இனவாதத்தையும் மக்கள் மத்தியில் குரோதத்தையும் ஏற்படுத்தும் சதித்திட்டமாகும்.

2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான சர்வதேச பிரகடனத்தின் 3ஆவது சரத்தின் கீழ் இனவாதம், மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தி குரோதத்திற்கு வித்திடும் அனைத்து நடவடிக்கைகளும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

அரசாங்கம் உடனடியாக இந்த இரண்டு விடயங்கள் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரணில் விச்ரமசிங்க ஆட்சிக்கு வந்த சந்தர்ப்பங்களில் மாத்திரமே எப்போதும் பிரிவினைவாதிகளும் கடும்போக்கு வாதிகளும் எழுச்சி பெறுகின்றனர்.

அது சரியாக மழை காலத்தில் அட்டைகள் துடிப்பதற்கு நிகரானது.

பேரணிக்கு ரணில் விக்ரமசிங்கவின் அனுசரணை இருந்ததா?

திலீபனின் நினைவூர்தி பேரணிக்கு யார் அனுமதி கொடுத்தது..! கொந்தளிக்கும் இனவாத எம்.பி | Thileeipan S Memorial Rally Udaya Gammanpila

கஜேந்திரன் மீதான காடையர்களின் தாக்குதல் : பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் கண்டனம்

கஜேந்திரன் மீதான காடையர்களின் தாக்குதல் : பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் கண்டனம்

இந்தப் பேரணிக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் அனுசரணை இருந்ததாக இல்லை.

அவரது வலுவற்ற ஆட்சியின் போதே எப்போதும் பயங்கரவாதிகள், கடும்போக்கு வாதிகள் எழுச்சி பெறுகின்றனர்.

புலிப் பயங்கரவாதம் ரணில் விக்ரமசிங்கவின் 2003 - 2004 ஆட்சியிலேயே வலுவடைந்தது. முஸ்லிம் பயங்கரவாதமும் அவரது 2015 - 2019 ஆட்சியிலேயே எழுச்சி பெற்றது.

ஆகவே இந்த நாட்டில் பயங்கரவாதமும் கடும்போக்கு வாதமும் அவரது அதிகரிக்க அவரது வலுவற்ற தன்மையே காரணமாக அமைந்துள்ளது.

தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள், பொதுமக்கள் பேரணிகளை முன்னெடுக்கும் போது தடை உத்தரவு பெறுகின்ற இந்த அரசாங்கம், பிரிவினைவாதம், பயங்கரவாதம், இனவாதத்தைப் பரப்பும் பாரிய பேரணியை ஏன் தடுக்கவில்லை என நாம் கேள்வி எழுப்புகிறோம்” என்றார்.


YOU MAY LIKE THIS VIDEO


ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காரைநகர்

27 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி, London, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைதீவு, ப்றீமென், Germany

26 Jul, 2020
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, Datteln, Germany, Olfen, Germany

23 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

kilinochchi, London, United Kingdom

06 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, சமரபாகு

25 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Markham, Canada

10 Aug, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Chenevières, France

21 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, புங்குடுதீவு, Oberburg, Switzerland

25 Jul, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Bützberg, Switzerland

24 Jul, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
மரண அறிவித்தல்

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
மரண அறிவித்தல்

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Woodbridge, Canada

29 Jul, 2022
20ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

25 Jul, 2005
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024