தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் : சிறீதரனின் கேள்விகளுக்கு பதிலளித்த நீதியமைச்சர்
தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan), நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் வழக்கறிஞர் ஹர்ஷன நாணயக்காரவிடம் (Harshana Nanayakkara) கேள்வி எழுப்பியிருந்தார்
சிறீதரனின் கேள்விக்கு நீதியமைச்சரின் பதில்கள் பின்வருமாறு அமைந்திருந்தன.
கேள்வி 01: தற்போது எத்தனை தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் உள்ளனர்?
பயங்கரவாத தடுப்புச் சட்டம்
பதில் - தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு நடவடிக்கைகளுக்காக குற்றம் சாட்டப்பட்டு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் மற்றும் சந்தேக நபர்கள் பின்வருமாறு:
தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பான சந்தேக நபர்கள் 04 பேர் உள்ளனர். மேலும், தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பான கைதிகள்: 08 பேர் உள்ளனர். (03 ஆயுள் தண்டனைகள், 02 ஆயுள் மேல்முறையீட்டு கைதிகள், 02 மரண தண்டனை கைதிகள் மற்றும் 01 கைதி).
தடுப்புக்காவல்
கேள்வி 02 : மேற்கண்ட தமிழ் அரசியல் கைதிகளை எந்த சிறைச்சாலை வைத்திருக்கின்றீர்கள்?
பதில் - பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் மற்றும் சந்தேக நபர்கள் பின்வரும் சிறைச்சாலை நிறுவனங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
வெலிக்கடை சிறைச்சாலை, மகசின் சிறைச்சாலை, கொழும்பு சிறைச்சாலை, மஹர சிறைச்சாலை, தும்பர சிறைச்சாலை, பூஸ்ஸ சிறைச்சாலை, நீர்கொழும்பு சிறைச்சாலை போன்றவற்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
(குறிப்பு: சில நேரங்களில் கைதிகள் நீதித்துறை நடவடிக்கைகளுக்காகவும், பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை தகவல்களின் அடிப்படையிலும் முன்னிலைப்படுத்தும்போது, இந்த தடுப்புக்காவல் சிறை இருப்பிடங்கள் மாறும்.)
விடுதலைக்கான கால அளவு
கேள்வி 03 : அவர்களின் விடுதலைக்கான கால அளவு என்ன?
பதில் - பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் மற்றும் சந்தேக நபர்கள் பின்வருமாறு விடுவிக்கப்படுவார்கள்:
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தண்டனைக் காலம் முடிந்ததும் விடுவிக்கப்படுவார்கள்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு சந்தேக நபர் நீதிமன்றத்தால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டால் சிறையில் இருந்து விடுவிக்கப்படலாம்.
ஒரு கைதி மேல்முறையீடு செய்திருந்தால், அந்த மேல்முறையீடு விசாரிக்கப்பட்டு இறுதியில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்படலாம். ஒரு சந்தேக நபர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டால், அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்படலாம்.
கேள்வி 04 : இந்தக் கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் அல்லது ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்க முடியுமா?
பதில் - அரசியலமைப்பின் 34வது பிரிவின்படி ஒரு கைதிக்கு மன்னிப்பு வழங்குவதற்கான சட்ட ஏற்பாடுகள் அரசியலமைப்பில் உள்ளன.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 2 நாட்கள் முன்
