புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி தொடர்பில் வெளியான அறிவிப்பு
2025 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் செப்டம்பர் 20 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி வெளியிட்டுள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையானது, இன்று இடம்பெற்றிருந்தது.
பெற்றோருக்கான வேண்டுகோள்
இதன்போது, பரீட்சை நாடு முழுவதும் 2,787 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது, அங்கு 307,951 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.
இதேவேளை, நடந்து முடிந்த பரீட்சையில் வினாத்தாளுக்கு பதிலளித்த விதம் குறித்து மாணவர்களிடம் கேள்வி கேட்பதைத் தவிர்க்கமாறு பரீட்சைகள் ஆணையாளர் பெற்றோரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், புலமைப்பரிசில் பரீட்சை என்பது ஒரு பரீட்சை மட்டுமே என்பதை சுட்டிக்காட்டிய அவர், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அழுத்தம் கொடுப்பதைத் தவிர்க்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 2 நாட்கள் முன்
