தமிழ் அரசியல் கைதி ஒருவர் 14 வருடங்களின் பின்னர் இன்று விடுதலை
முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்காக அதிநவீன உபகரணங்களை கடத்திய குற்றச்சாட்டில் கைதான ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
14 வருடங்களின் பின்னர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி தரங்க மஹரத்ன முன்னிலையில் பிரதிவாதி முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கனகரத்தினம் ஆதித்யன் என்ற தமிழ் அரசியல் கைதியே 14 வருடங்களின் பின்னர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நவீன தொழில்நுட்ப உபகரணங்களை
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கடந்த 2009 ஆம் ஆண்டு கனகரத்தினம் ஆதித்யன் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.
2007 ஆம் ஆண்டு சிங்கப்பூரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சில நவீன தொழில்நுட்ப உபகரணங்களை தமிழீழ விடுதலைப்புலிகள் தலைமையத்தில் ஒப்படைக்கச் சென்ற வாகனம் வவுனியா – இரட்டைபெரியகுளத்தில் காவல்துரையினால் கைப்பற்றப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் 2009 ஆம் ஆண்டு கனகரத்தினம் ஆதித்யன் கைது செய்யப்பட்டார்.
கனகரத்தினம் ஆதித்யன் சார்பில் சட்டத்தரணி பிருந்தா சந்திரகேஸ், அதிபர் சட்டத்தரணி கே.வி.தவராசா மன்றில் முன்னிலையாகி விடயங்களை சமர்ப்பித்தமை குறிப்பிடத்தக்கது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
