ஜேவிபி அரசின் மாற்றம் என்பது இதுதானா...?

Sri Lankan Tamils Tamils Anura Kumara Dissanayaka Sri Lanka Government Sonnalum Kuttram
By Shalini Balachandran Jul 01, 2026 08:09 AM GMT
Report
Courtesy: Priyangan

ஊழலற்ற மனித உரிமைகளை மதிக்கும் புதிய இலங்கையை உருவாக்குவோம் என்று முழங்கி மக்களின் வாக்குகளைப் பெற்று அரியணை ஏறிய தேசிய மக்கள் சக்தியின் அநுர அரசு, இன்று தமிழ் மக்களின் நெஞ்சில் மற்றுமொரு பாரிய இடியை இறக்கியுள்ளது.

ஓய்வுபெறப் போகிறார் என்ற ஒரே காரணத்திற்காக கடற்படைத் தளபதி காஞ்சன பனாகொடவுக்கு அட்மிரல் ஆக ஆக உயரிய பதவி உயர்வை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்றைய தினம் வழங்கியுள்ளார்.

இலங்கையின் கடந்த கால அரசுகள் போர்க்குற்றவாளிகளைக் கொண்டாடியபோது அவர்கள் இனவாதிகள் என கடந்து போக முடிந்தது.

ஆனால் சிஸ்டம் சேஞ்ச் பேசும் அநுர அரசும் அதே பாதையில் பயணிப்பது எத்தகையதொரு ஏமாற்று வித்தை ? இதற்கு திடீர் தோழர்களின் பதில் என்ன ?

1. நீங்கள் நீதியின் பக்கமா ? குற்றவாளிகளின் பக்கமா ?

இறுதிப்போரின் போது முல்லைத்தீவு, புதுமாத்தளன் பாதுகாப்பு வலையங்கள் மீது நடத்தப்பட்ட கண்மூடித்தனமான கடற்படைத் தாக்குதல்கள் மற்றும் பொதுமக்கள் மீதான எறிகணைத் தாக்குதல்களுக்கு கட்டளைப் பொறுப்பு வகித்த அதிகாரிகளுக்கு மகுடம் சூட்டுவதுதான் நீங்கள் கூறும் புதிய இலங்கையா ?

2. காணாமல் ஆக்கப்பட்டோரின் கண்ணீருக்கு பதில் என்ன ?

கொழும்பிலும் திருகோணமலையிலும் தமிழ் இளைஞர்கள் வெள்ளை வேன்களில் கடத்தப்பட்டு கப்பம் கோரப்பட்டு பின்னர் கொடூரமாகக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் (Navy 11 Case) நடந்தபோது கடற்படையின் உயர் பொறுப்புகளில் இருந்தவர்களுக்கு அது தெரியாமல் இருந்திருக்குமா ?

பாதிக்கப்பட்ட தாய்மார்களின் கண்ணீரை விட இந்த அதிகாரிகளின் தோள்களில் ஏறும் நட்சத்திரங்கள் உங்களுக்குப் பெரிதாகிவிட்டதா ?

3. சர்வதேச தடைகளை புறந்தள்ளுகிறதா அரசு?

சர்வதேச மனித உரிமை அமைப்புகளாலும் ஐநா நிபுணர் குழுக்களாலும் (ITJP, UNHRC) போர்க்குற்றப் பட்டியலிலும் பயணத் தடைகளுக்கான பரிந்துரைகளிலும் உள்ளடக்கப்பட்டுள்ள அதிகாரிகளுக்குத் தொடர்ந்து பதவி உயர்வு வழங்குவதன் மூலம் சர்வதேச சட்டங்களை நாங்கள் மதிக்க மாட்டோம் என்ற ராஜபக்சாக்களின் அதே திமிரான அரசியலையா ஜே.வி.பி அரசும் கையில் எடுத்துள்ளது.

 4. அப்படியென்றால் தமிழ் மக்களின் வாக்குகள் எதற்கு ?

வடக்கு-கிழக்கு தமிழ் மக்கள் இந்த ஆட்சியைத் தண்டிப்பதற்காக வாக்களிக்கவில்லை தங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்ற மிகச்சிறிய நம்பிக்கையில்தான் வாக்களித்தார்கள்.

இன்று போர்க்குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் நம்பிக்கையை அநுர அரசு மிகக் கொடூரமாகக் குத்திக் கிழித்துள்ளது.

இராணுவக் கட்டமைப்புக்குள் இருக்கும் சிங்கள-பௌத்த பேரினவாத வாக்கு வங்கியைத் திருப்திப்படுத்துவதற்காக நீதியையும் பொறுப்புக்கூறலையும் அநுர அரசு பலியிட்டுள்ளது.

மகிந்த செய்யும்போது பிழையாகத் தெரிந்த போர்க்குற்றப் பாதுகாப்பு அநுர அரசு செய்யும் போது எப்படிச் சரியாகும் ? பதவிகளும் பட்டங்களும் மாறலாம் ஆனால் முள்ளிவாய்க்காலிலும் கடற்படைத் தளங்களிலும் சிந்தப்பட்ட அப்பாவிகளின் இரத்தம் ஒருபோதும் மறையாது...!  

தமிழ் இனப்படுகொலைக்கு மூடுவிழா! செம்மணியில் இருந்து திசை திருப்பப்படும் தமிழ் மக்கள்

தமிழ் இனப்படுகொலைக்கு மூடுவிழா! செம்மணியில் இருந்து திசை திருப்பப்படும் தமிழ் மக்கள்

வலி. வடக்கில் இராணுவத்தின் புதிய அடையாளம்! காற்றில் பறக்கும் மக்களின் காணி மக்களுக்கே வாக்குறுதி!

வலி. வடக்கில் இராணுவத்தின் புதிய அடையாளம்! காற்றில் பறக்கும் மக்களின் காணி மக்களுக்கே வாக்குறுதி!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட வாலிப முன்னணித் தலைவரின் சீற்றம்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட வாலிப முன்னணித் தலைவரின் சீற்றம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026