யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட கனடாவில் வாழ்ந்த இளைஞனுக்கு நேர்ந்த துயரம்
யாழ்ப்பாணத்தை (jaffna)பின்புலமாக கொண்டவரும் கனடாவில்(canada) வாழ்ந்து வருபவருமான இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த துயர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கடந்த வாரம் இடம்பெற்ற இந்தசம்பவத்தில் ஒன்டாரியோ ஸ்காபுரோ பகுதியை சேர்ந்த இளைஞனே உயிரிழந்தவராவார்.
உயிரிழந்த இளைஞன் கனடாவில் பிறந்தவர் என்றும், அவரது பெற்றோர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நீரில் மூழ்கி உயிரிழப்பு
குறித்த 19 வயது இளைஞன் நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளான்.இதன்போது அவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Bancroft பகுதியில் ஏரியில் சடலம் ஒன்று மிதப்பதாக காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மீட்பு குழுவினர் அந்தப் பகுதிக்கு சென்றுள்ளனர்.
இதன்போது படகில் இருந்த இருவர் பாதுகாப்பாக கரை சேர்ந்ததாகவும் ஒருவர் நீரில் விழுந்து மூழ்கியதாக சந்தேகப்பட்டதாகவும் அவசர உதவி குழுவினர் தெரிவித்தனர்.
உயிர்க்காப்பு அங்கி அணிந்திருக்கவில்லை
நீருக்கடியில் தேடிய மீட்பு பிரிவினர் சடலம் ஒன்றை கண்டுபிடித்த நிலையில், அது படகில் சென்ற மூன்றாவது இளைஞன் என்பதை உறுதிப்படுத்தினர்.
அதேவேளை சம்பவத்தின் போது உயிரிழந்த இளைஞன் உயிர்க்காப்பு அங்கி (life jacket) அணிந்திருக்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 14 மணி நேரம் முன்
