இந்தியாவில் 4 தமிழர்களுக்கு லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்! நால்வருக்கும் 100 கோடி பரிசு
இந்தியாவின் கேரள மாநிலத்தில் நடைபெற்ற ஓணம் பம்பர் லொட்டரியில் தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் பரிசு வென்றுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி ஓணம் பம்பர் லொட்டரி விற்பனை அமோகமாக நடப்பாண்டில் நடந்தது.
இதில் முதல் பரிசு ரூ.25 கோடி ஆகும். இரண்டாவது பரிசு 1 கோடி (20 நபர்களுக்கு), மூன்றாவது பரிசு 50 லட்சம் (20 நபர்களுக்கு) வழங்கப்படும். இவை தவிர மொத்தம் 5 லட்சத்து 35 ஆயிரம் பரிசுகள் அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர்

இந்த நிலையில், ஓணம் லொட்டரியில் ரூ.25 கோடி பம்பர் பரிசை தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் வென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல மலையாள செய்தி இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில் திருப்பூரைச் சேர்ந்த பாண்டிராஜ், நடராஜன், குப்புசாமி, ராமசாமி ஆகிய 4 பேரும் கூட்டாக வாங்கிய டிக்கெட்டிற்கு தான் இந்த பரிசுத்தொகை விழுந்து இருப்பதாக கூறப்படுகிறது.

நான்கு பேரும் தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள லொட்டரி அலுவலகத்தில் தங்கள் டிக்கெட்டை கொடுத்து பரிசுத்தொகை பெற்று இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
YOU MAY LIKE THIS
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்