பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவுள்ள தமிழர் : அம்பிகா சற்குணநாதன் தகவல்!

Sri Lanka Police Human Rights Commission Of Sri Lanka Government Of Sri Lanka Northern Province of Sri Lanka Sri Lanka Prevention of Terrorism Act
By Eunice Ruth Nov 30, 2023 02:55 PM GMT
Report

இலங்கையில் மாவீரர் நாள் நினைவேந்தலில் பங்கேற்ற மேலும் பலரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்ய சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார். 

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் கைது நடவடிக்கைகள் அரசாங்கத்தின் மீதான தமிழர்களின் நம்பிக்கையை மேலும் சிதைக்குமென அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மாவீரர் நாளை முன்னிட்டு கடந்த திங்கட்கிழமை தமிழர் தாயகத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டோர்

இதன் போது, 9 பேர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார். 

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவுள்ள தமிழர் : அம்பிகா சற்குணநாதன் தகவல்! | Tamils Will Be Arrested Under Pta Hrcsl Sl Ambika

சேதமடைந்துள்ள கிராமிய வீதிகளைப் புனரமைக்கும் பணிகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பம் - பந்துல

சேதமடைந்துள்ள கிராமிய வீதிகளைப் புனரமைக்கும் பணிகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பம் - பந்துல

இதில் உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவரொருவரும் பெண் ஒருவரும் உள்ளடங்குவதாக அவர் தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 20 பேரை கைது செய்ய காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

பயங்கரவாதமாக கருதப்படாத செயல்

அத்துடன், வாகனங்களை குத்தகைக்கு எடுத்த நபர், ஒலிபெருக்கிகளை கொண்டு வந்தவர்கள் மற்றும் சிவப்பு-மஞ்சள் கொடிகளை நினைவேந்தல் நிகழ்வுகளுக்காக கொண்டு வந்தவர்களும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவுள்ள தமிழர் : அம்பிகா சற்குணநாதன் தகவல்! | Tamils Will Be Arrested Under Pta Hrcsl Sl Ambika

நாட்டு மக்களுக்கு பேரிடி: காத்திருக்கும் மிகப்பெரிய வரி வசூலிப்பு!

நாட்டு மக்களுக்கு பேரிடி: காத்திருக்கும் மிகப்பெரிய வரி வசூலிப்பு!

எனினும், வாகனங்களை குத்தகைக்கு எடுப்பது பயங்கரவாதமாக கருதப்படாதென அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார். 

சிறிலங்கா அரசாங்கத்தின் எதிர்கால திட்டம் 

கைது செய்யப்பட்டவர்களுள் 3 பேர் மட்டக்களப்பு காவல் நிலையத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் காலங்களில் மேலும் சிலரை இந்த சட்டத்தின் கீழ் கைது செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.  

இலங்கையில் தீர்வு காணப்படாத பல பிரச்சனைகள் இருப்பதாகவும் அவற்றுக்கு தீர்வு காண சிறிலங்கா அரசாங்கம் தவறியுள்ளதாகவும் அம்பிகா சற்குணநாதன் குறிப்பிட்டுள்ளார். 

இந்த நிலையில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் கைது நடவடிக்கைகள் அரசாங்கத்தின் மீதான தமிழர்களின் நம்பிக்கையை மேலும் சிதைக்குமென அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஈழத்தமிழரை வைத்து காய் நகர்த்தும் இந்தியா மற்றும் சீனா! மாறி சிந்திக்கும் நிலையில் தாயகம்

ஈழத்தமிழரை வைத்து காய் நகர்த்தும் இந்தியா மற்றும் சீனா! மாறி சிந்திக்கும் நிலையில் தாயகம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்