வெளிநாடொன்றில் தமிழருக்கு அடித்த அதிஷ்டம்
துபாயில்(dubai) தமிழ்நாட்டைச்(tamil nadu) சேர்ந்த தமிழரான முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவருக்கு அதிஷ்ட இலாப சீட்டிழுப்பில் 10 லட்சம் திர்ஹாம் (இந்திய மதிப்பில் சுமார் 2.35 கோடி) பரிசு கிடைத்துள்ளது.
தமிழகத்தின் நெல்லையை சேர்ந்த பீர் முகம்மது ஆதம் (வயது 41) என்பவருக்கே இந்த பரிசுத் தொகை விழுந்துள்ளது. இவா் துபாயில் உள்ள பொதுத்துறை நிறுவனத்தில் தொழில்நுட்பவியலாளராக வேலை செய்து வருகிறார்.
இந்த அதிஷ்டம் கிடைத்தமை குறித்து அவர் தெரிவிக்கையில், நான் கடந்த 2007-ம் ஆண்டு முதல் துபாயில் வேலை செய்து வருகிறேன். என்னுடைய மனைவி மற்றும் 4 வயது மகள் நெல்லையில் வசித்து வருகின்றனர்.
மாதந்தோறும் அதிஷ்ட சீட்டிழுப்பில் பங்கு பெறுவோம்
துபாயில் கடந்த 3 ஆண்டுகளாக நானும் என்னுடைய இந்திய(india), பாகிஸ்தானிய (pakistan)நண்பர்கள் என மொத்தம் 20 பேர் சேர்ந்து மாதந்தோறும் அதிஷ்ட சீட்டிழுப்பில் பங்கு பெறுவோம்.

இம்முறை எனது பெயரில் அதிஷ்ட டிக்கெட் வாங்கி குலுக்கலில் பங்கு பெற்றோம். முதல் முறையாக எங்களுக்கு அதிஷ்டம் அடித்துள்ளது.
10 லட்சம் திர்ஹாம் பரிசுத்தொகை எனது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. எனது நண்பர்கள் அனைவருக்கும் பகிர்ந்து காசோலைகளை அளித்துள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல… 20 மணி நேரம் முன்