புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு : தலைமறைவான ஆசிரியர் சிக்கினார்
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் வினாக்களை முன்கூட்டியே வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தேடப்பட்டு வந்த ஆசிரியர் நேற்று (24) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
அலவ்வ, துல்ஹிரிய, கோவில் தோட்டத்தை சேர்ந்த எம்.சி. குமார இளங்கசேகர என்ற உதவி ஆசிரியரே கைது செய்யப்பட்டள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப் குரூப் மூலம் வினாத்தாள் விநியோகம்
புலமைப்பரிசில் பரீட்சையின் கேள்விகளை கசியவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த 23 ஆம் திகதி குருநாகல் தித்தவெல்லவில் கைது செய்யப்பட்ட பிரேமதிலக்க என்ற தேசிய கல்வி நிறுவனத்தின் திட்டமிடல் பணிப்பாளரால் இந்த ஆசிரியர் தனது வகுப்பு பிள்ளைகளுக்கு வாட்ஸ்அப் குரூப் மூலம் வினாத்தாள்களை விநியோகித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து அந்த வாட்ஸ்அப் குரூப்பை ஆசிரியர் நீக்கியிருப்பதும் தெரியவந்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம்
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்த நீக்கப்பட்ட தரவுகளை மீட்பதற்காகவும், இந்தக் கேள்விகளை கசியவிடுவதில் ஈடுபட்டுள்ள மற்றவர்களைக் கண்டறியவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கைது செய்யப்பட்ட ஆசிரியர் கடுவெல நீதவான் சனிமா விஜயபண்டார முன்னிலையில் இன்று (25) முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் மாதம் ஏழாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
