திங்களன்று போராட்டத்தில் குதிக்க தயாரான ஆசிரியர்கள் - விடுக்கப்பட்ட அறிவிப்பு
protest
teachers
Joseph Stalin
By Sumithiran
எதிர்வரும் திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் தொடர் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர்களின் போராட்டத்தை ஒடுக்கவும், அவர்களின் கோரிக்கைகளுக்கு அரசு உரிய முறையில் பதிலளிக்காததை கண்டித்தும் இந்த போராட்டம் நடத்தப்படுவதாக ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின்(Joseph Stalin) தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை கடமைக்கு சமுகமளிக்கவுள்ளதாகவும், பிற்பகல் 1.30க்கு பின்னர் இந்தப் போராட்டங்களில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.