சிறிலங்கா இராணுவத்தின் நினைவிடத்திற்கு விழுந்தடித்து ஓடிய விமல்! காவல்துறை சட்ட நடவடிக்கை
புதிய இணைப்பு
சிறிலங்கா இராணுவத்தின் தேசிய போர்வீரர்கள் நினைவிடத்திற்கு அருகில் இன்று காவல்துறையினருக்கு எதிராக குழப்பம் விளைவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
சிறிலங்கா இராணுவத்தின் தேசிய போர்வீரர்கள் நினைவிடத்தில் இடம்பெற்ற ஒத்திகை நிகழ்வின்போதே இவ்வாறு விமல் வீரவன்ச தரப்பால் குழப்பம் விளைவிக்கப்பட்டுள்ளது.
நாளை நடைபெறவுள்ள பிரதான நிகழ்விற்கான இந்த ஒத்திகையும் மற்ற ஏற்பாட்டுப் பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உட்பட சுமார் 35 பேர் கொண்ட குழுவினர், போர் வீரர்கள் நினைவிடத்தில் அனுமதியின்றி நுழைய முயன்று, ஒத்திகைப் பணிகளுக்கும் அதிகாரிகளின் கடமைகளுக்கும் இடையூறு விளைவித்ததாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு
பத்தரமுல்லையில் அமைந்துள்ள சிறிலங்கா இராணுவத்தின் தேசிய போர்வீரர்கள் நினைவிடத்திற்கு அருகில் இன்று (18) பிற்பகல் பதற்றமான சூழ்நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச உள்ளிட்ட குழுவினர், இந்த தேசிய போர்வீரர்கள் நினைவிடத்திற்குச் சென்று மலரஞ்சலி செலுத்த முயன்றபோதே இப்பதிற்ற நிலை உருவாகியுள்ளது.
நாளை (19) நடைபெறவிருக்கும் தேசிய போர்வீரர்கள் நினைவுத் தின விழாவிற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதன் காரணமாக, முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச மற்றும் அவரது குழுவினரை நினைவிடத்திற்குள் நுழைவதற்கு காவல்துறையினர் அனுமதிக்கவில்லை.
தரையில் விழுந்த விமல்
இதன்போது கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு பதற்றமான சூழல் ஒன்று உருவானதுடன், காவல்துறையின் உத்தரவுகளையும் மீறி விமல் வீரவன்ச மற்றும் அவரது குழுவினர் நினைவிடத்திற்குள் நுழைய முயன்றனர்.

எவ்வாறாயினும், அவர்கள் எவரையும் போர்வீரர்கள் நினைவிடத்திற்கு அருகில் செல்வதற்கு காவல்துறையினர் அனுமதிக்கவில்லை.
இந்த நிலையில், காவல்துறையினரை கடந்து விமல் வீரவன்ச ஓட முற்பட்ட போது கால் தடுக்கி தரையில் விழுந்தது காணொளிகளில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |