நீர் கொழும்பில் பதற்றம் (வீடியோ)
நீர் கொழும்பில் இரண்டு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் அப்பகுதியில் பதற்றம் நிலவுவதாக மூத்த பத்திரிகையாளர் ரங்கா ஸ்ரீலால் ட்வீட் செய்துள்ளார்.
“நீர் கொழும்பு பெரியமுல்ல பிரதேசவாசிகள் அப்பகுதியில் உள்ள அவேந்திரா ஹோட்டலை சூறையாடியதையடுத்து இரண்டு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டது.
பிரதேச அரசியல்வாதி ஒருவரின் ஆதரவுடன் கூடிய குழுவொன்று அப்பகுதியில் உள்ளவர்கள் கொள்ளையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி வீடுகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
சம்பவத்தில் நால்வர் காயமடைந்து நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வான் ஒன்று, மூன்று முச்சக்கர வண்டிகள், எட்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஐந்து துவிச்சக்கர வண்டிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
Tense situation is Negombo where shops and vehicles torched#lka #SriLankaCrisis #Negombo pic.twitter.com/rz1wVSE0ri
— Prabodth Yatagama (@PrabodaYatagama) May 10, 2022






நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
