தமிழக மீனவர்கள் கைதால் பதற்றம் : முதலமைச்சர் ஸ்டாலின் அவசர கடிதம்

Indian fishermen M K Stalin Dr. S. Jaishankar Sri Lanka Navy
By Jaso Jan 24, 2024 12:38 PM GMT
Report

"தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்படுவது கவலையளிப்பதாக உள்ளதாகவும் இந்த செயல் பதற்றமான சூழ்நிலையை உருவாக்கும் என்பதால், இதில் மத்திய அரசு உடனடி கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது" என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் சிறிலங்கா கடற்படையினரால் ஜனவரி 22 அன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களையும், அவர்களது கடற்றொழில் படகுகளையும் விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (24) கடிதம் எழுதியுள்ளார்.

 சிறிலங்கா கடற்படையினரால்  கைது

அந்தக் கடிதத்தில், கடற்றொழில் படகுகளுடன் கடற்றொழிலுக்கு சென்றிருந்த நிலையில், ஜனவரி22 அன்று சிறிலங்கா கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சமீப காலமாக தமிழக மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்படுவது கவலையளிப்பதாக உள்ளது.

தமிழக மீனவர்கள் கைதால் பதற்றம் : முதலமைச்சர் ஸ்டாலின் அவசர கடிதம் | Tension Among Tamil Nadu Fishermen

இத்தகைய போக்கு பதற்றமான சூழ்நிலையை உருவாக்கும் என்பதால், இதில் மத்திய அரசு உடனடி கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய தொடர் கைது நடவடிக்கைகள், தமிழ்ச் சமூகத்தின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பறிப்பதோடு, மீனவ மக்களிடையே அச்சத்தையும், நிச்சயமற்ற சூழலையும் உருவாக்கியுள்ளது.

பொருளாதார பயங்கரவாதிகளாகச் செயற்படுகின்றது ராஜபக்ச குடும்பம்!

பொருளாதார பயங்கரவாதிகளாகச் செயற்படுகின்றது ராஜபக்ச குடும்பம்!

பொருளாதாரக் கட்டமைப்பை அச்சுறுத்தும் வகையில்

தமிழகத்தைச் சேர்ந்த மீனவ சமூகங்களின் கலாசார மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண உரிய தூதரக வழிமுறைகளைப் பின்பற்றி தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தமிழக மீனவர்கள் கைதால் பதற்றம் : முதலமைச்சர் ஸ்டாலின் அவசர கடிதம் | Tension Among Tamil Nadu Fishermen

மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இந்தியா - இலங்கை நாடுகளுக்கிடையேயான கூட்டு நடவடிக்கைக் குழுவினை அமைப்பதன் மூலம் இது சாத்தியமாகும்.

45 ஆண்டுகளின் பின் மீண்டும் பூமியை கடக்கவுள்ள சிறுகோள் : நாசா வெளியிட்டுள்ள அறிவிப்பு

45 ஆண்டுகளின் பின் மீண்டும் பூமியை கடக்கவுள்ள சிறுகோள் : நாசா வெளியிட்டுள்ள அறிவிப்பு

அப்பாவி மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை

அப்பாவி கடற்றொழிலாளர்கள் தொடர்ந்து இதுபோன்று கைது செய்யப்படுவதைத் தவிர்க்கவும், இந்திய கடற்றொழிலாளர்களுக்கும், சிறிலங்கா கடற்படையினருக்கும் இடையே நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஏதுவாகவும், உரிய தூதரக வழிமுறைகளை மேற்கொண்டு கூட்டு நடவடிக்கைக் குழுவினை கூட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக மீனவர்கள் கைதால் பதற்றம் : முதலமைச்சர் ஸ்டாலின் அவசர கடிதம் | Tension Among Tamil Nadu Fishermen

இலங்கைக் காவலில் உள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விரைந்து விடுவித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த ரி 20 வீரர் யார் தெரியுமா..!

2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த ரி 20 வீரர் யார் தெரியுமா..!

இதேவேளை இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபடும்போதே சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்