விடுதலைப்புலிகளின் தலைவரின் பெயரை வைத்து காய் நகர்த்தும் தென்னிலங்கை
அண்மைய நாட்களாக தென்னிலங்கை அரசியல் தரப்பில் விடுதலைப்புலிகளின் தலைவரின் பெயரை அரசியல் தலைமைகள் பயன்படுத்துவது என்பது அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்தநிலையில், 16 ஆண்டுகள் கழித்து ஏன் தேசிய தலைவர் தொடர்பிலும் மற்றும் விடுதலை புலிகள் தொடர்பிலும் அவர்கள் கருத்துக்கள் வெளியிட வேண்டும் என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
தங்களை பிரபல்யப்படுத்துவதற்காக அல்லது வேறு ஏதும் அரசியல் திட்டங்கள் இந்த நடவடிக்கைகள் பின் மறைந்திருக்கின்றனவா என்ற அடிப்படையிலும் கூட மக்கள் கருத்துக்கள் வெளியிட்டு வருகின்றனர்.
இதில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) விடுதலைப்புலிகளின் தலைவரை காப்பாற்றினார் என்ற கருத்துக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தேசிய தலைவர் குறித்து தெரிவித்த கருத்துக்கள் என்பன பெரும் பேசு பொருளாக மாறியிருந்தது.
இது தொடர்பிலும், தென்னிலங்கை தரப்பு அரசியல் நிலவரம், தமிழர் தரப்பு அரசியல் நிலவரம், நடப்பு அரசியலின் முக்கிய நகர்வுகள் மற்றும் பலதரப்பட்ட அரசியல்சார் விடயங்களை விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
