கிழக்கில் தலைதூக்கும் தீவிரவாதம் : அநுர தரப்பு வெளியிட்ட தகவல்
கிழக்கு மாகாணத்தின் கல்முனை பிரதேசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள தீவிரவாத அமைப்பு ஒன்று தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் (04.03.2025) இடம்பெற்றது.
இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் அவர் மேற்கண்டவறு குறிப்பிட்டுள்ளார்.
தீவிரவாத குழு
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் "கிழக்கு மாகாணத்தை மையமாகக் கொண்டு தீவிரவாத குழு ஒன்று தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளது.
தீவிரவாதக் குழுவைப் பற்றிய கூடுதல் விவரங்களைக் கண்டறியும் பணியில் காவல்துறை உளவுத்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து ஜனாதிபதி நாடாளுமன்றத்திலும் சில தகவல்களை வழங்கினார்.
இந்த தீவிரவாதக் குழுவின் நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்புப் படையினர் மிகுந்த விழிப்புடன் உள்ளனர் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும் 7 மணி நேரம் முன்
