இந்திய மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: தாய்லாந்து அரசின் அசத்தல் அறிவிப்பு
தாய்லாந்து அரசு இந்தியர்களுக்கு அசத்தல் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
தாய்லாந்து நாட்டிற்கு உலகம் முழுவதிலும் இருந்து, பல லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஆண்டுதோறும் சுற்றுலா செல்கின்ற நிலையில் பெரும்பாலான இந்தியர்களின் கனவு சுற்றுலா தளமாக தாய்லாந்து விளங்குகிறது.
இதன்போது, வெளிநாடுகளில் இருந்து அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவரும் முயற்சியாக, இந்தியா மற்றும் தைவான் குடிமக்களுக்கான விசா தேவையை தாய்லாந்து அரசு தளர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.
விசா தேவையில்லை
இந்த ஆண்டில் மட்டும் சுமார் 12 லட்சம் சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்துக்குச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், நவம்பர் மாதம் முதல் 2024 ஆம் ஆண்டு மே வரை இந்தியா மற்றும் தைவான் மக்களுக்கு விசா நடைமுறை நீக்கப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், விசா இல்லாமல் 30 நாட்கள் வரை தாய்லாந்தில் தங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 10 மணி நேரம் முன்