நாட்டின் பொருளாதாரம் ஆபத்தில் - உண்மையை கூறிய கம்மன்பிலவுக்கு நன்றி தெரிவிப்பு
harsha de silva
truth
udaya gammanpila
By Sumithiran
நாட்டின் பொருளாதாரம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது என்ற உண்மையை தெரிவித்தமைக்காக அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு நன்றி தெரிவித்துள்ளது எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி.
இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா டி சில்வா குறிப்பிட்டுள்ளதாவது,
எரிபொருள்களின் விலைகளை அதிகரிக்காவிட்டால் நாட்டின் வங்கித் துறை நெருக்கடிக்குள் தள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த உண்மையை தெரிவித்தமைக்காக நாங்கள் அவருக்கு நன்றி தெரிவிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு வங்கியிடமிருந்து இன்னொரு அரச வங்கி டொலரை கொள்வனவு செய்யும் நடைமுறை காரணமாக வங்கித் துறை நெருக்கடிக்குள்ளாகியுள்ளது என ஹர்சா டிசில்வா தெரிவித்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி