பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கொடிக்கு கிடைத்த அங்கீகாரம்..!
பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கொடிக்கு பிரித்தானிய காவல்துறையினர் அனுமதியளித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பிரித்தானியாவில் அமைப்பொன்றின் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக intercontinental park lane hotel இல் இலங்கை அதிபர் ரணில் தங்கியிருந்துள்ளார்.
இதனை அறிந்த பிரித்தானியாவை சேர்ந்த தமிழ் அமைப்புக்கள் ஒன்றிணைந்து போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
இதன்போது பிரித்தானிய காவல்துறையினர் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை சந்தித்து, அவர்கள் போராட்டத்திற்கு பயன்படுத்திய கொடி தடை செய்யபட்டது என கூறியதாகவும் அதற்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், இது தடை செய்யப்பட்ட கொடியல்ல எனவும் இது தமிழர்களின் கொடி எனவும் தெரிவித்துள்ளனர்.
கொடியை பயன்படுத்த அனுமதி
லண்டனில் ரணிலுக்கு எதிராக ஈழத் தமிழர்கள் போராட்டம் (படங்கள்) |
இது தொடர்பில் ஆராய்ந்த காவல்துறையினர் தமிழ் மக்களின் கொடியை பயன்படுத்தலாம் எனவும் அவர்கள் வேறு கொடி என நினைத்து தவறாக கூறியதாகவும் மன்னிப்பு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கமைய விடுதலைப்புலிகளின் கொடிக்கு பிரித்தானிய காவல்துறையினர் அங்கீகாரம் அளித்ததாக கூறப்படுகின்றது.
