வசந்த கரன்னாகொட கைதின் இருண்ட பக்கங்கள்! ராஜபக்ச குடும்பத்திற்கு பேரிடி
2006-ஆம் ஆண்டு எவ்விதத் தகுதிகளும் இன்றி யோஷித ராஜபக்சவை கடற்படையில் இணைத்துக்கொண்டமை மற்றும் அரசு செலவில் அவரை பிரிட்டனுக்குப் பயிற்சிக்கு அனுப்பியமை போன்ற ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொட கைது செய்யப்பட்டு பிணையில் அனுப்பப்பட்டார்.
இதேவேளை, வசந்த கரன்னாகொடவின் பெயர் 2008-2009 காலப்பகுதியில் கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு, கப்பம் பெறப்பட்டு, பின்னர் படுகொலை செய்யப்பட்ட கொடூரமான வழக்கோடும் தொடர்புபடுத்தப்படுகிறது.
இந்த வழக்கில் கரன்னாகொட 14-வது சந்தேகநபராகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், 2021-ல் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்னோக்கி கொண்டு செல்லப்போவதில்லை என இலங்கை சட்டமாதிபர் திணைக்களம் அறிவித்தது.
எனினும், போர் காலத்தில் நடந்த மனித உரிமை மீறல்கள் காரணமாக, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் கரன்னாகொடவுக்கு எதிராகப் பயணத்தடை மற்றும் சொத்து முடக்கம் போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
இவ்வாறானதொருபின்னணியில், தற்போது அவர் ஒரு நிதி ஊழல் வழக்கிற்காகக் கைது செய்யப்பட்டிருந்தாலும், காணாமல் ஆக்கப்பட்ட 11 இளைஞர்களின் குடும்பத்தினருக்கான நீதி இன்னும் கேள்விக்குறியாகவே உள்ள நிலையில், இந்த வழக்கு தொடர்பான விரிவாக விடயங்களை எடுத்துரைக்கிறது ஐபிசி தமிழின் காலத்தின் அத்தியாயம்,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
4 நாட்கள் முன்